பெங்களூரு - மைசூரு இடையே மின்சாரப் பேருந்து சேவை தொடங்கியது

2 mins read
9a80a87e-17e1-4983-92b6-801953e8359e
-

பெங்­க­ளூரு: கர்­நா­டகா மாநி­லத்­தில் மாசற்ற சுற்­றுச்­சூ­ழலை உரு­வாக்க, அம்­மா­நில அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. அதன்­படி பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்­றால் இயங்­கும் பேருந்­து­க­ளுக்­குப் பதி­லாக மின்­சா­ரப் பேருந்­து­களை பெங்­க­ளூர் நக­ரப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் முன்­ன­தாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் பெங்­க­ளூரு நக­ரப்­போக்கு­வ­ரத்­துக் கழ­கம், 100 மின்­சா­ரப் பேருந்­து­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இதற்கு மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்­புக் கிடைத்­துள்­ளது. அதை­ய­டுத்து, கர்­நா­டக அரசுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­க­மும் மாநி­லம் முழு­தும் மின்­சா­ரப் பேருந்­துச் சேவை­யைத் தொடங்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. அதற்­கான சோதனை ஓட்­டத்தை கடந்த வாரம் ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொண்­டது.

பெங்­க­ளூ­ரு­வில் இருந்து ராம­ந­கர் வரை­யி­லும் இந்த சோதனை ஓட்­டம் நடத்­தப்­பட்­டது. இது வெற்றி பெற்­ற­தைத் தொடர்ந்து பெங்­க­ளூ­ரு­வில் இருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்­கும் மின்­சா­ரப் பேருந்­து­களை இயக்க கழ­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அந்­தத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக பெங்­க­ளூ­ருக்­கும் மைசூ­ருக்­கும் இடையே அர­சுப் போக்கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் முதல் மின்­சாரப் பேருந்­துச் சேவை நேற்று (திங்­கட்­கி­ழமை) தொடங்­கப்­பட்­டது.

இந்த மின்­சா­ரப் பேருந்­து­கள் கண்­கா­ணிப்­புக் கேமரா, இணைய இணைப்பு போன்ற வச­தி­க­ளு­டன் பாது­காப்பு அம்­சங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

ஹைத­ரா­பாத்­தைத் தள­மா­கக் கொண்ட 'ஒலெக்ட்ரோ கிரீன்­டெக் லிமி­ட்டெட்' என்­னும் நிறு­வ­னம் இந்­தப் பேருந்­து­க­ளைத் தயா­ரித்­துள்­ளது.

இந்த மின்­சா­ரப் பேருந்­துச் சேவை பெங்­க­ளூ­ரு­வில் இருந்து ஷிவ­மொக்கா, சிக்­க­ம­க­லூரு, விராஜ்­பேட் மற்­றும் மடி­கேரி போன்ற சிறு நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று கர்­நா­டகா போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் தெரி­வித்­துள்ளது.

2030ஆம் ஆண்­டுக்­குள் கர்­நா­டக மாநி­லத்­தில் சேவை­யில் இருக்­கும் 35,000 பொதுப் பேருந்­து­க­ளை­யும் மின்­சா­ரப் பேருந்­து­க­ளாக மாற்ற கர்­நா­டக அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.