பண்டிகை கொண்டாட்டம்: காற்றாடி நூல் கழுத்தை அறுத்து ஆறு பேர் பலி; 130 பேர் காயம்

பண்டிகை கொண்டாட்டம்: காற்றாடி நூல் கழுத்தை அறுத்து ஆறு பேர் பலி; 130 பேர் காயம்

1 mins read
2d01fb4a-b926-4864-815a-1d587573fe31
காற்­றா­டி­யைப் பறக்க விடு­வ­தற்­குத் தேவைப்­படும் மாஞ்சா நூல் சீனா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் தர­மற்ற அந்த நூல்­தான் பல­ரது உயி­ரைப் பறிக்க முக்­கி­யக் கார­ண­மாக இருப்பதாகவும் தெரி­ய­வந்­துள்­ளது. -

அக­ம­தா­பாத்: பண்­டிகை கொண்­டாட்­டத்­தின்­போது பறக்க விடப்­பட்ட காற்­றா­டி­க­ளின் நூல் கழுத்தை அறுத்­த­தில் மூன்று குழந்­தை­கள் உட்­பட ஆறு பேர் பலி­யா­னது குஜ­ராத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அங்கு ஆண்­டு­தோ­றும் கொண்­டா­டப்­படும் உத்­த­ரா­யண பண்­டி­கை­யின்­போது பட்­டங்­க­ளைப் பறக்­க­வி­டு­வது முக்­கிய நிகழ்­வாக உள்­ளது.

தமி­ழ­கம் உள்­ளிட்ட தென் மாநி­லங்­களில் பொங்­கல் பண்­டிகை கொண்­டா­டப்­படும் வேளை­யில், குஜ­ராத் உள்­ளிட்ட சில வட மாநி­லங்­களில் உத்­த­ரா­யண பண்­டிகை விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

அச்­ச­ம­யம் பல வண்­ணங்­கள், பல்­வேறு வடி­வங்­களில் உள்ள பெரிய காற்­றா­டி­கள் பறக்க விடப்­ப­டு­கின்­றன.

நடப்­பாண்டு இந்­தக் கொண்­டாட்­டத்­தின்­போது, காற்­றாடி நூல் பல­ரது கழுத்தை பதம் பார்த்­து­விட்­டது. இத­னால் 130க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

குஜ­ராத்­தின் பவ­ந­கர் பகுதி யில் தந்­தை­யு­டன் இரு­சக்­கர வாக­னத்­தில் சென்று கொண்­டி­ருந்த இரண்டு வயதே ஆன கீர்த்தி என்ற குழந்­தை­யின் கழுத்தை காற்­றாடி நூல் அறுத்­த­தில் அவள் பலி­யா­னாள்.

இதே­போல் மூன்று வயது பெண் குழந்தை சாலை­யில் நடந்து சென்­ற­போது காற்­றாடி நூல் கழுத்­தில் சிக்­கிக் கொண்­டது.

அடுத்த சில நொடி­களில் அந்­தக் கயிறு கழுத்தை அறுத்­த­தில் கிஸ்­மத் என்ற அந்­தச் சிறுமி உயி­ரி­ழக்க நேரிட்­டது.

உய­ர­மான இடங்­களில் நின்று காற்­றா­டி­க­ளைப் பறக்­க­விட்­ட­போது, தவறி கீழே விழுந்து 46 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

காற்­றா­டி­யைப் பறக்க விடு­வ­தற்­குத் தேவைப்­படும் மாஞ்சா நூல் சீனா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் தர­மற்ற அந்த நூல்­தான் பல­ரது உயி­ரைப் பறிக்க முக்­கி­யக் கார­ண­மாக உள்ளதாகவும் தெரி­ய­வந்­துள்­ளது.