கார்கே: ஏழை - பணக்­கா­ரர் இடை­வெளி அதிகரிப்பு

கார்கே: ஏழை - பணக்­கா­ரர் இடை­வெளி அதிகரிப்பு

1 mins read
a2646b06-8464-43d0-9798-078d73adca1e
-

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்திர மோடி தலை­மை­யி­லான பார­திய ஜனதா ஆட்­சி­யில் ஏழை - பணக்­கா­ரர் இடை­வெளி அதி­க­ரித்­துள்­ள­து என காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

சுவிட்­சர்­லாந்து நாட்­டில் நடை­பெற்ற உலகப் பொரு­ளா­தார ஆண்டுக் கூட்­டத்­தில் 'ஆக்ஸ்­ஃபாம் இன்­டர்­நே­ஷ­னல்' என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அதில் இந்­தி­யா­வின் 40 விழுக்­காட்டு வளங்­கள் ஒரு விழுக்­காட்டுப் பெரும் பணக்­கா­ரர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

இதனைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள காங்­கி­ரஸ் தலை­வர் கார்கே, பாஜக ஆட்­சி­யில் ஏழை, பணக்­கா­ரர் இடை­யி­லான இடை­வெளி அதி­க­ரித்­து­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

இந்­திய ஒற்­று­மைப் பய­ணம் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வை நிரப்­பக்­கூ­டிய இயக்­கம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இதே­போல் முந்­தைய ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி அரசு, 20 கோடி இந்­தி­யர்­களை வறு­மை­யின் பிடி­யில் இருந்து விடு­வித்­த­தா­க­வும், ஆனால் பாஜக அரசு அவர்­களை மீண்­டும் வறு­மை­யின் பிடி­யில் தள்­ளி­விட்­ட­தா­க­வும் காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்­தி­யும் சாடி­யுள்­ளார். ஏழை மக்­கள் வறு­மை­யில் வாடும் நிலைக்­குக் கொண்­டு­வந்த பாஜக அர­சின் கொள்­கை­களை எதிர்க்­கும் செய­லாக இந்­திய ஒற்­றுமை நடைப்­ப­ய­ணம் திகழ்­கிறது என்­றும் ராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.