பாஜக எம்பி தற்செயலாக விமானக் கதவை திறந்தார்: மத்திய அமைச்சர் விளக்கம்

பாஜக எம்பி தற்செயலாக விமானக் கதவை திறந்தார்: மத்திய அமைச்சர் விளக்கம்

1 mins read
18814bec-5a24-43c2-9396-1d14dbb8eeb1
விமா­னம் புறப்­பட இருந்த நேரத்­தில் அதன் கதவை தேஜஸ்வி தற்­செ­ய­லாக திறந்ததாகவும் அப்­போது தமிழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை உடன் இருந்­த­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது. படம்: பிக்ஸாபே -

புது­டெல்லி: இண்­டிகோ விமா­னத்­தின் அவ­ச­ர­கால கதவை திறந்­தது தொடர்­பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்­னிப்பு கோரி­ய­தாக மத்­திய விமான போக்­கு­வ­ரத்­துறை அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் 10ஆம் தேதி அந்த விமா­னம் சென்­னை­யில் இருந்து திருச்சி சென்­றது.

விமா­னம் புறப்­பட இருந்த நேரத்­தில் அதன் கதவை தேஜஸ்வி தற்­செ­ய­லாக திறந்ததாகவும் அப்­போது தமிழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை உடன் இருந்­த­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது. சில தரப்­பி­னர் இந்த விவ­கா­ரத்தை மூடி மறைத்­து­விட்­ட­தாக சர்ச்சை வெடித்த நிலை­யில், உரிய விசா­ரணை மேற்­கொண்டு விளக்­கம் அளிக்குமாறு இண்­டிகோ விமான நிறு­வ­னத்­துக்கு விமானப் போக்­கு­வ­ரத்து இயக்குந­ர­கம் உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், தெரி­யா­மல் அவ­ச­ர­கால கதவை திறந்­து­விட்­ட­தாக பாஜக எம்.பி தெரி­வித்­த­தா­க மத்­திய அமைச்­சர் விளக்கம் அளித்துள்ளார்.

எனி­னும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் இந்த விவ­கா­ரத்தை ஏன் மூடி மறைக்கவேண்­டும் எனும் கேள்வி எழுந்து சமூக ஊட­கங்­களில் விவா­தம் நடைபெற்று வருகிறது.