சதிச்செயலில் ஈடுபட திட்டம்: இரு பயங்கரவாதிகள் கைது

சதிச்செயலில் ஈடுபட திட்டம்: இரு பயங்கரவாதிகள் கைது

2 mins read
f1ef15ac-8ef9-4c20-b4df-73823c216883
-

குடியரசு தினத்தையொட்டி கண்காணிப்பு தீவிரம்; கனடா தீவிரவாதியின் கூட்டாளிகள்

புது­டெல்லி: கன­டா­வைச் சேர்ந்த பயங்­க­ர­வா­தி­யின் கூட்­டா­ளி­கள் இரு­வரை டெல்லி காவல்­துறை கைது செய்­துள்­ளது. அவர்­களிடம் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

குடி­ய­ரசு தின விழாவை சீர்­கு­லைக்க பயங்­க­ர­வா­தி­கள் சதிச்­செ­யல்­களை அரங்­கேற்­றக்­கூ­டும் என உளவு அமைப்­பு­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலை­யில், பல்­வேறு மாநி­லங்­களில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

குறிப்­பாக பஞ்­சாப் மாநி­லத்­தில் காலிஸ்­தான் அமைப்­பைச் சேர்ந்த பயங்­க­ர­வா­தி­க­ளைக் குறி­வைத்து காவல்­துறை தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பஞ்­சாப் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில், இரண்டு பயங்­க­ர­வா­தி­கள் கைதாகி உள்­ள­தாக காவ­ல்­துறை தெரி­வித்­தது.

பஞ்­சாப் மாநி­லம் குர்­தா­பூர் பகு­தி­யைச் சேர்ந்த ராஜன் பட்டி, பிரோஸ்­பூர் பகு­தி­யைச் சேர்ந்த கன்­வல்­ஜீத் சிங் ஆகிய இரு­வரும் தற்­போது பிடி­பட்­டுள்­ள­னர். இவர்­கள் கன­டா­வைச் சேர்ந்த பயங்­க­ர­வாதி லக்­பிர் சிங் லந்தா­வின் கூட்­டா­ளி­கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

இரு பயங்­க­ர­வா­தி­கள் மீதும் பல்­வேறு கொலை­கள், சதிச் செயல்­களில் ஈடு­பட்­டது தொடர்­பான வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.

இரு­வ­ரும் சமூக நல்­லி­ணக்­கத்தைக் கெடுக்­கும் சதிச்­செ­யல்­களில் ஈடு­பட்டு வந்­த­வர்­கள் என்­றும் பஞ்­சாப் காவல்­துறை இவர்­களைத் தீவி­ர­மா­கத் தேடி வந்­த­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று டெல்லி காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.

விரை­வில் நடை­பெற உள்ள குடி­ய­ரசு தின விழா­வை­யொட்டி பயங்­க­ர­வா­தி­கள் பல்­வேறு இடங்­களில் தாக்­கு­தல் நடத்­தக்­கூ­டும் என உளவு அமைப்­பு­கள் எச்­ச­ரித்­துள்­ளன. இதை­ய­டுத்து பல்­வேறு மாநிலங்­களில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.