திரிச்சூர்: கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயி லுக்கு இதுவரை 264 கிலோ தங்கம், 20,000 தங்கத் தகடுகளைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். அத்துடன், இக்கோயில் பெயரில் ரூ.1,700 கோடிக்கு வங்கியில் வைப்புத் தொகை உள்ளது. இதுதவிர, 271.05 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
குருவாயூர் கோயில் இருப்பில் 264 கிலோ தங்கம்
1 mins read
-

