ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நேர்ந்த ஒரு சாலை விபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தில் (இஸ்ரோ) பணியாற்றும் ஐந்து ஊழியர்கள் பலியாகினர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், ஷிஜூ, அமல், சச்சின், சுமோத் ஆகிய ஐவரும் திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், ஆலப்புழாவில் நடைபெறும் தங்களது நண்பர் ஒருவரின் திருமணத் தில் பங்கேற்பதற்காக அவர்கள் நேற்று அதிகாலையில் அம்பலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த னர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இவ்விபத்தில் 24 முதல் 30 வயது வரையிலான ஐந்து ஆடவர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரி ஓட்டுநர், அவரது உதவியாளரைக் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

