மரபுமீறாத கேரள ஆளுநர்: அரசு உரையை அப்படியே வாசித்தார்

திரு­வ­னந்தபுரம்: கேரள சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­ட­ரின் தொடக்­கத்­தில் உரை­யாற்­றிய அம்­மா­நில ஆளு­நர் ஆரிஃப் முக­மது கான், அரசு தயா­ரித்­துக் கொடுத்த உரையை எந்த மாற்­ற­மும் இன்றி அப்­ப­டியே வாசித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தைப் போலவே கேர­ளா­வி­லும் அம்­மா­நில அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு­கிறது.

எனி­னும் ஆளு­நரிடம் அளிக்கப்பட்ட உரை­யில் எந்த மாற்­ற­மும் செய்யப்படாத­தால் பிரச்­சினை ஏதும் வெடிக்­க­வில்லை.

அண்­மை­யில் தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் உரை­யாற்­றிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயார் செய்து கொடுத்த உரை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­த­தா­க ஆளும்­த­ரப்பு புகார் எழுப்­பி­யது. இதை­ய­டுத்து பேர­வை­யில் இருந்து வழக்­கத்­துக்கு மாறாக முன்­கூட்­டியே வெளி­யே­றி­னார் ஆளு­நர்.

இந்­நி­லை­யில், கேரள சட்­டப்­பே­ர­வை­யின் பட்­ஜெட் கூட்­டத்­தொ­டர் தொடங்கி உள்­ளது. மர­புப்­படி இத்­தொ­ட­ரின் துவக்க நிகழ்­வாக அம்­மா­நில ஆளு­நர் ஆரிஃப் முக­மது கான் உரை­யாற்­றி­னார்.

கேர­ளா­வில் உள்ள பல்­கலைக்­க­ழ­கங்­க­ளின் நிர்­வா­கம், அவற்­றில் செய்­யப்­படும் நிய­ம­னங்­கள் தொடர்­பாக ஆளு­நர் தனது எதிர்ப்பை அவ்­வப்­போது பதிவு செய்து வரு­கி­றார். இது­கு­றித்து பேர­வை­யில் உரை­யாற்­றும்­போது அவர் குறிப்­பிட வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­தப்­பட்­டது. ஆனால் அவ்­வாறு ஏதும் நிக­ழ­வில்லை.

மாறாக மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் எந்த மாற்றமும் இன்றி அப்படியே வாசித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!