பெங்களூரு: மேம்பாலத்தில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை பெங்களூரின் கேகே சந்தைப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நின்று ஓர் ஆடவர் பத்து ரூபாய் நோட்டுகளை கொத்துக் கொத்தாக வீசினார்.
இதைக் கண்ட பொதுமக்கள் அந்நோட்டுகளை அள்ளியெடுக்க திரளாகக் கூடினர். இதனால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது. அந்த ஆடவர் எதற்காக இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை.
பின்னர் அவர் வீசிய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆடவரை தேடிக்கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஆடவர் ரூபாய் நோட்டுகளை வீசியது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களில் அதை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

