உபி: சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

உபி: சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

2 mins read
8e5d9ad2-9547-4b79-be2a-e52564993513
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சட்ட விரோத ஆயுதத் தொழிற்­சாலை இயங்கி வந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­யடுத்து அதை நடத்தி வந்­த­வர் உட்­பட இரு­வரை அம்­மா­நில காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து 34 நவீன, நாட்­டுத் துப்­பாக்­கிகள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. அவை அனைத்­தும் டெல்­லி­யில் இயங்கி வரும் சமூக விரோ­தி­க­ளுக்­கும் அவர்­க­ளு­டைய கூட்­டா­ளி­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­பட இருந்­தது விசா­ர­ணை­யில் அம்­ப­ல­மா­னது.

குடி­ய­ரசு தினத்தையொட்டி, நாடு முழு­வ­தும் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­ட­லாம் என மத்­திய உளவு அமைப்­பு­கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­பதை அடுத்து, சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர்­கள் கைது செய்­யப்­படுன்­ற­னர்.

இந்­நி­லை­யில், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சட்ட விரோத ஆயு­தத் தொழிற்­சாலை இயங்கி வந்­திருப்­பது அம்­மா­நில அர­சுக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

கைதான நவீன் ராணா, சலீம் ஆகிய இருவரும் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், ஷாமிலி மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர். நவீன் ராணா டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்­சா­லை­யில் சென்­ற­போது சந்­தே­கத்­தின் பேரில் விசா­ரிக்­கப்­பட்­டார். அப்போது அவர் வைத்­தி­ருந்த பையை சோத­னை­யிட்­ட­போது பத்து துப்­பாக்­கி­கள் இருப்்­பது தெரி­ய­வந்­தது. அவர் கொடுத்த தக­வ­லின் பேரில் சலீம் (39 வயது) சிக்­கி­னார். நவீன் ராணா­வின் சகோ­த­ரர் ஆசிஃப் உத்­த­ரப்­ பி­ர­தேச மாநில சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவர் மூல­மாக சலீ­முக்கு தாம் அறி­மு­க­மா­ன­தா­க­வும் சலீ­மி­டம் இருந்து வெடி­பொ­ருள்­கள், ஆயு­தங்­க­ளைப் பெற்று, டெல்­லி­யில் உள்ள பல்­வேறு குண்­டர் கும்­பல்­க­ளுக்­குத் தாம் விநி­யோ­கித்­த­தா­க­வும் நவீன் தெரி­வித்துள்­ளார்.

இந்­நி­லை­யில், கள்­ளத் துப்­பாக்­கி­களைத் தயா­ரித்து விநி­யோ­கிப்­பது, அவற்றை வாங்கி சமூக விரோ­தச் செயல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­வது, கடத்­து­வது உள்­ளிட்ட செயல்­களில் ஈடு­படும் கும்­பலை மொத்­த­மாக பிடிக்க காவல்­து­றை­யி­னர் திட்­ட­மிட்­ட­னர்.

கைதான இரு­வ­ரும் அளித்த வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் சாம்லி மாவட்­டத்­தில் டெல்லி, உத்­த­ரப் பிர­தேச காவல்­து­றை­மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின்­போது அங்­குள்ள கரும்புத் தோட்­டத்­துக்கு மத்­தி­யில் ஆயு­தத் தொழிற்­சாலை இயங்கி வந்­தது தெரி­ய­வந்­தது. அங்­கி­ருந்து ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­கள், துப்­பாக்­கித் தோட்­டாக்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. கடந்த சில தினங்களில் மட்டும் 34 துப்பாக்கிகள் சிக்கியுள்ளன.

இது தொடர்­பான விசா­ர­ணை­யும் தேடு­தல் வேட்­டை­யும் நீடிக்கும் நிலை­யில், இரு மாநி­லங்­க­ளி­லும் குடி­ய­ரசு தினத்­தை­யொட்டி கூடு­தல் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

குடியரசு தினத்தையொட்டி தீவிர பாதுகாப்பு: இருவர் கைது; 34 துப்பாக்கிகள் பறிமுதல்