ஆறு மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

ஆறு மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

1 mins read
e8040dc6-a35b-4aef-8a76-c8b7a4778c6c
-

புது­டெல்லி: நேப்­பா­ளத்­தில் நேற்று முன்­தி­னம் ஏற்­பட்ட நில­நடுக்­கத்தை டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம், உத்­த­ரா­கண்ட், பீகார், ஹரி­யானா, ராஜஸ்­தான் மாநி­லங்­களில் மக்­கள் உணர்ந்­த­னர்.

வீடு­கள், கட்­ட­டங்­களில் அதிர்வு­கள் உண­ரப்­பட்­ட­தால் பீதி­ய­டைந்த மக்­கள் சாலை­களில் திரண்­ட­னர்.

டெல்­லி­யில் ஏறத்­தாழ 30 விநா­டி­கள் வரை நீடித்த நில­நடுக்­கத்­தின்­போது வீடு­களில் இருந்த பொருள்­கள் உருண்­டன.

ராஜஸ்­தா­னில் தலை­ந­கர் ஜெய்ப்­பூர் உள்­ளிட்ட பகு­தி­களில் நில­அ­திர்­வு­கள் உண­ரப்­பட்­டன.

அங்கு அரசு அலு­வ­ல­கங்­கள், தலை­மைச் செய­லக ஊழி­யர்­கள் தங்­கள் அலு­வ­ல­கத்தை விட்டு வெளி­யேறி, சாலை­யில் குவிந்­த­னர்.

டெல்லி உட்­பட எந்த மாநிலத்­தி­லும் பொருள்­சே­தமோ, உயி­ரிழப்போ ஏற்­ப­ட­வில்லை என்பது நிம்மதி அளிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் இரு­மு­றை­யும் நடப்பு ஜன­வ­ரி­யில் ஏற்­கெ­னவே இரு­மு­றை­யும் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது.

இத­னால் பொது­மக்­கள் மத்­தி­யில் அச்­சம் நிலவி வந்­தது. இந்­நி­லை­யில், மீண்­டும் நில­ந­டுக்­கம் உண­ரப்­பட்­டுள்­ளது.