பிபிசி ஆவணப்படத்தால் பல்கலையில் பதற்றம்

பிபிசி ஆவணப்படத்தால் பல்கலையில் பதற்றம்

1 mins read
e1bd21ea-bc44-4afe-a699-0a9ce6a09f8a
-

திரு­வ­னந்­தபுரம்: பிர­த­மர் மோடி குறித்து பிபிசி ஊட­கம் வெளி­யிட்ட ஆவ­ணப் படத்தை திரை­யிடு­வது தொடர்­பாக டெல்லி ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மோதல் வெடித்­தது.

தடையை மீறி ஒரு தரப்­பி­னர் ஆவணப் படத்தை திரை­யிட முயன்­ற­போது, பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் மின்­சா­ரம், இணைய இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டது. எனி­னும் மாண­வர்­களில் சிலர், தங்­கள் கைப்­பே­சி­யில் ஆவணப் படத்தைப் பார்க்க முயன்­ற­போது அவர்­கள் மீது கற்­கள் வீசப்­பட்­ட­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

தாக்­கு­த­லைக் கண்­டித்து மாண­வர்­கள் பலர் அரு­கி­லுள்ள காவல் நிலை­யத்தை நோக்கி பேரணி­யா­கச் சென்­ற­னர். மாண­வர்­கள் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தை அடுத்து பல்­கலை வளா­கத்­திற்கு வெளியே காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, பிபிசி ஆவணப் படத்­துக்கு முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஏ.கே.அந்­தோ­ணி­யின் மகன் ்அனில் அந்­தோணி எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்­தும் அவர் விலகி உள்­ளார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தினம் இரவு முழு­வ­தும் தமக்கு ஏரா­ள­மான மிரட்­டல் அழைப்­பு­கள் வந்­த­தா­க அனில் அந்தோணி கூறி­னார்.