30,000 பேரிடம் ரூ.200 கோடி மோசடி

30,000 பேரிடம் ரூ.200 கோடி மோசடி

2 mins read
5b8aecff-5f7e-450c-b25d-b80fca928d26
கடந்த நான்கு மாதங்­க­ளாக இந்த மோசடி அரங்­கேறி வந்­த­தா­கத் தெரி­கிறது. -

புது­டெல்லி: வீட்­டில் இருந்­த­படி பணி­யாற்­ற­லாம் என்ற அறி­விப்பை நம்பி முப்­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் ஏமாந்­துள்­ள­னர். அவர்­க­ளி­டம் இருந்து மோச­டிக் கும்­பல் ஒன்று ரூ.200 கோடி வரை ஏமாற்றி உள்­ள­தாக டெல்லி காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த நான்கு மாதங்­க­ளாக இந்த மோசடி அரங்­கேறி வந்­த­தா­கத் தெரி­கிறது. இது தொடர்­பாக நான்கு பேர் கைதா­கி­னர். முக்­கிய குற்­ற­வாளி ஒரு­வர் ஜார்­ஜியா நாட்­டில் தங்கி இருப்­ப­தும் இக்­கும்­பல் பிறரை ஏமாற்றி வசூ­லித்த கோடிக்­க­ணக்­கான பணம் துபா­யில் இருந்த நிறு­வ­னத்­துக்கு மாற்­றப்­பட்­ட­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 20ஆம் தேதி மோச­டிக்­கும்­ப­லால் பணத்தை இழந்த ரோகிணி என்ற பெண்­மணி காவல்­து­றை­யில் புகார் அளித்­தார்.

வீட்­டில் இருந்­த­படி பணி­யாற்­றி­னால் நாள்­தோ­றும் 15,000 ரூபாய் பணம் ஈட்­ட­லாம் என்ற அறி­விப்பை இணை­யத்­த­ளத்­தில் பார்த்த அவர், தனது பெய­ரைப் பதிவு செய்­துள்­ளார். அதன் பின்­னர் சமூக ஊட­கங்­கள் வழி அவ­ரைத் தொடர்­பு­கொண்ட ஒரு­வர், தனி­யார் நிறு­வ­னத்­தின் பொருள்­க­ளின் விற்­பனை அளவை உயர்த்த வேண்­டும் என்­றும் அது தொடர்­பாக இணை­யம் வழி சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

அவர் குறிப்­பிட்ட இணை­யத்­த­ளத்­தைப் பயன்­ப­டுத்தி வேலை பார்க்க தொடங்­கி­யதை அடுத்து, இணை­யம்­வழி செயல்­படும் குறிப்­பிட்ட ஒரு செயலி மூலம் தனது கணக்­கில் நாள்­தோ­றும் சம்­ப­ளப்­ப­ணம் அதி­க­ரித்து வரு­வ­தைப் பார்த்­துள்­ளார் ரோகிணி.

இந்­நி­லை­யில், இணை­யம் வழி தள்­ளு­படி விலை­யில் விற்­பனை செய்­யப்­படும் சில பொருள்­களை வாங்­கு­மாறு அவர் பணி­யாற்­றிய போலி நிறு­வ­னம் வலி­யு­றுத்தி உள்­ளது. இத­னால் சுமார் 1.20 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள பொருள்­களை வாங்­கு­வ­தற்கு பணம் செலுத்தி உள்­ளார் ரோகிணி.

ஆனால், பொருள் எது­வும் வந்து சேர­வில்லை. அதே சம­யம் மேலும் அவ­ருக்கு நாள்­தோ­றும் ஊதி­யம் வழங்­கு­வ­தாக காட்­டப்­பட்ட கணக்­கும் பொய்­யா­னது என்­பது தெரிய வந்­துள்­ளது.

காவல்­துறை விசா­ரித்­த­போது, மோச­டிக் கும்­பல் சீனா­வில் இருந்து இயங்­கு­வ­தும், அவர்­கள் பயன்­ப­டுத்­திய சமூக ஊடக கணக்­கு­கள் வெளி­நா­டு­களில் இருந்து இயக்­கப்­பட்­ட­தும் உறு­தி­யா­னது. இக்­கும்­ப­லுக்கு உத­விய நால்­வர் கைதா­கி­னர். இக்­கும்­பல் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் உள்­ள­வர்­க­ளு­டன் இணைந்து மோசடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. நாள்­தோ­றும் ஐந்து கோடி ரூபாய் பணத்தை மோச­டி­யாக வசூ­லித்­துள்­ளது.