காவல் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு

காவல் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு

1 mins read
0ee7d850-8793-4a95-828d-b38dee88923a
ஒடிசா மாநி­லத்­தில் அலு­வ­ல­கக் கட்­ட­டத் திறப்புவிழா ­ஒன்றில் கலந்­து­கொள்ள நேற்­று­முன்­தினம் வருகை தந்­தி­ருந்த அமைச்­சர் மீது உதவி துணை காவல்­துறை ஆய்­வா­ளர் கோபால் தாஸ் என்பவர் துப்­பாக்கி சூடு நடத்­தி­னார். படம்: த இந்து -

புவ­னேஸ்­வர்: ஒடிசா மாநி­லத்­தில் அலு­வ­ல­கக் கட்­ட­டத் திறப்புவிழா ­ஒன்றில் கலந்­து­கொள்ள நேற்­று­முன்­தினம் வருகை தந்­தி­ருந்த அமைச்­சர் மீது உதவி துணை காவல்­துறை ஆய்­வா­ளர் கோபால் தாஸ் என்பவர் துப்­பாக்கி சூடு நடத்­தி­னார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த அமைச்­ச­ர் மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்­தது.

இந்­நி­லை­யில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

ஒடிசா மாநி­லத்­தின் சுகா­தார அமைச்­ச­ரான நபா கிஷோர் (61 வயது) உயிரிழந்த இச்­சம்­ப­வம் அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. இவர், ஒடிசா மாநி­லத்­தின் பிரஜ்­ராஜ்­ந­கர் நக­ராட்­சி­யின் தலை­வர் மற்­றும் துணைத் தலை­வ­ருக்­கான புதிய அலு­வ­ல­கங்­க­ளைத் திறந்துவைப்­ப­தற்­காக நேற்று முன்­தி­னம் காரில் வந்து இறங்­கி­னார். அப்போது அருகில் இருந்த உதவி துணை காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன என்று கூறப்படுகிறது.