நண்பரின் அடையாள அட்டையைத் திருடி 36 ஆண்டுகள் அரசுப் பணியில் நீடித்த ஆடவர்

நண்பரின் அடையாள அட்டையைத் திருடி 36 ஆண்டுகள் அரசுப் பணியில் நீடித்த ஆடவர்

1 mins read
7f8c19d0-947b-404c-9815-7db50b59328c
போபால்: நண்­ப­ரின் அடை­யாள அட்­டை­யைத் திரு­டிய ஒரு­வர், அர­சுப் பணி­யில் சேர்ந்து 36 ஆண்­டு­கள் பணி­யாற்­றி­யது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது. படம்: பிக்ஸாபே -

போபால்: நண்­ப­ரின் அடை­யாள அட்­டை­யைத் திரு­டிய ஒரு­வர், அர­சுப் பணி­யில் சேர்ந்து 36 ஆண்­டு­கள் பணி­யாற்­றி­யது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

மத்­தி­யப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த நர­சிங் தேவாங்­கன் என்­ப­வர் 1984ஆம் ஆண்டு தனது நண்­ப­ரான தாதாய்­ராம் என்­ப­வ­ரது அடை­யாள அட்­டை­யைத் திரு­டி­யுள்­ளார். பின்­னர் அதை வைத்து அர­சுப் பணி­யி­லும் சேர்ந்­துள்­ளார்.

நிலக்­க­ரிச் சுரங்க ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றிய அவர் கடந்த 2020ஆம் ஆண்டு கால­மா­னார்.

இதை­ய­டுத்து அரசு ஊழி­ய­ருக்­கான கரு­ணைத் தொகை­யை­யும் இதர பலன்­க­ளை­யும் பெறு­வ­தற்­காக அவ­ரது குடும்­பத்­தார் விண்­ணப்­பித்­த­போது தான் ஆள்­ மாறாட்­ட மோசடி அம்­ப­ல­மா­னது.

மேலும், நரசிங் தேவாங்கனின் நண்­ப­ரான தாதாய்­ராம் தற்­போது சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் உள்ள கிரா­மத்­தில் வசிப்­ப­தும் அவ­ரது குடும்­பம் வறு­மை­யில் வாடு­வ­தும் தெரி­ய­வந்­தது.

தன் தந்­தை­யின் அடை­யாள அட்­டை­யைத் திருடிய நர­சிங் தேவாங்­க­னும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் நல்ல நிலை­யில் இருப்­பதை அறிந்து கடும் கோப­ம­டைந்­துள்ள நர­சிங் தேவாங்­க­னின் மகன் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார். நர­சிங் தேவாங்­கன் பெற உள்ள ஓய்­வூ­தி­யத்தை தனது தந்­தைக்கு அளிக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.