தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை எய்ம்ஸ் நிதி: எதிர்க்கட்சிகள் போராட்டம்

1 mins read
410d4696-39f9-49e1-9c76-944deabd1f2e
புது­டெல்லி: மத்­திய அர­சின் நிதி­நிலை அறிக்­கை­யில் மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டா­த­தைக் கண்­டித்து தமி­ழக எம்­பிக்­கள் டெல்­லி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். படம்: இபிஏ -

புது­டெல்லி: மத்­திய அர­சின் நிதி­நிலை அறிக்­கை­யில் மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டா­த­தைக் கண்­டித்து தமி­ழக எம்­பிக்­கள் டெல்­லி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே நடந்த இந்­தப் போரா­ட்­டத்­தில் காங்­கி­ரஸ், திமுக எம்­பிக்­கள் பங்­கேற்­ற­னர்.

மதுரை எய்ம்ஸ் மருத்து­வ­மனை­யின் கட்­டு­மா­னப் பணிக்கு நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பே அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. எனி­னும் மத்­திய அரசு நிதி ஒதுக்­கீடு செய்­யா­த­தால் எந்­தப் பணி­யும் இது­வரை தொடங்­கப்­ப­ட­வில்லை.

புதிய நிதி­நிலை அறிக்­கை­யில் நிதி ஒதுக்­கீடு குறித்த அறி­விப்பு இடம்­பெ­றும் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது. ஆனால் மத்­திய அரசு நிதி ஏதும் ஒதுக்­க­வில்லை. இதைக் கண்­டித்து எதிர்க்­கட்சி எம்­பிக்­கள் நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.