500 மாணவிகள்; ஒரே ஆண்: மயங்கி விழுந்த மாணவன்

500 மாணவிகள்; ஒரே ஆண்: மயங்கி விழுந்த மாணவன்

1 mins read
deadaee9-0c65-4f98-91b7-735e1c0c401b
-

பீகார்: தேர்­வுக்­கூ­டத்­தில் தன்­னைத் தவிர மற்ற அனை­வ­ருமே பெண்­க­ளாக இருந்­த­தைக் கண்டு மாண­வர் ஒரு­வர் மயங்கி விழுந்த சம்­ப­வம் இந்­தி­யா­வின் பீகார் மாநி­லத்­தில் நிகழ்ந்­தது.

பீகார்­ ஷ­ரிஃப் பகு­தி­யைச் சேர்ந்த மணீஷ் சங்­கர் பிர­சாத் என்ற அந்­த 17 வயது மாண­வர், கடந்த புதன்­கி­ழமை 12ஆம் வகுப்பு கணி­தப் பாடத் தேர்­வெ­ழு­து­வ­தற்­கா­கச் சற்று முன்­ன­தா­கவே தேர்வு நடக்­கும் பள்­ளிக்­குச் சென்­று­விட்­டார்.

தேர்­வுக்­கூ­டத்­திற்­குச் சென்­ற­தும்­தான் அங்கு 500 மாண­வி­கள் இருந்­த­தை­யும் தான் ஒரு­வனே ஆட­வர் என்­ப­தை­யும் அவர் உணர்ந்­தார்.

அத­னால், ஏற்­கெ­னவே கூச்ச சுபா­வம் கொண்ட மணீஷ், உடல் நடுக்­கம் எடுத்து, அங்­கேயே மயக்­கம் போட்டு விழுந்­து­விட்­டார்.

அச்­சத்­தில் தலை­வ­லி­யும் காய்ச்­ச­லும் சேர்ந்­து­வி­டவே, அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டார். மறு­நாள் வியா­ழக்­கி­ழமை அவர் தேர்­வெ­ழு­தச் செல்­ல­வில்­லை­யாம்.

இந்­நி­லை­யில், விண்­ணப்­பப் படி­வத்­தில் மணீஷ் தனது பாலி­னத்­தைப் 'பெண்' என்று தவ­று­த­லா­கக் குறிப்­பிட்­டி­ருக்­க­லாம் என்­றும் அத­னால் அவ­ருக்கு மாண­வி­க­ளுக்­கான தேர்வு மையம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் பள்ளி நிர்­வா­கம் தெரி­வித்­தது.