அனைத்துலக சவால்கள்: இந்தியா, அமெரிக்கா முடிவு

1 mins read
662d0085-cf02-4b03-b3b7-3c93217d56ed
-

புது­டெல்லி: அனைத்­து­லக அள­வி­லான சவால்­களை எதிர்­கொள்­வ­தில் அமெ­ரிக்­கா­வும் இந்­தி­யா­வும் இணைந்து செயல்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவ­லு­ட­னான சந்­திப்­புக்­குப் பிறகு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்கன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது இரு தரப்பு உத்திபூர்வ பங்காளித்துவ உறவு மேலும் நெருக்­க­ம­டை­யும் வகை­யில் வட்­டார, அனைத்­து­லக அள­வி­லான பல்­வேறு விவ­கா­ரங்­கள், சவால்­கள் குறித்து கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ட­தாக அமெ­ரிக்கா கூறி­யுள்­ளது.

அமைச்­சர் பிளிங்­கன் தமது டுவிட்­டர் பதிவு ஒன்­றில், இந்­தி­யா­வு­ட­னான ஒத்­து­ழைப்பை அமெ­ரிக்கா மேலும் விரி­வு­ப­டுத்­தும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­ன­தாக கடந்த செவ்­வா­வய்க்­கி­ழமை அமெ­ரிக்க பாது­காப்பு ஆலோ­ச­க­ரை­யும் சந்­தித்து தாம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக அஜித் தோவல் தெரி­வித்­தி­ருந்­தார். சிக்கலான, வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னெடுப்பு தொடர்பில் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.