உச்ச நீதிமன்ற அமர்வில் இந்திய, சிங்கப்பூர் தலைமை நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற அமர்வில் இந்திய, சிங்கப்பூர் தலைமை நீதிபதிகள்

1 mins read
39bd40b1-5e80-467d-9338-f08b8df65a1e
-

புது­டெல்லி: வழக்­கத்­திற்கு மாறாக, இந்­திய உச்ச நீதி­மன்­றத்­தில் வெள்­ளிக்­கி­ழமை நடந்த வழக்கு விசா­ர­ணையை இந்­திய தலைமை நீதி­பதி டி.ஓய். சந்­தி­ர­சூ­டு­டன் சேர்ந்து சிங்­கப்­பூர் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் நேரில் பார்­வை­யிட்­டார்.

இந்­திய உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் சங்­கத்­தின் தலை­வ­ரும் மூத்த வழக்­க­றி­ஞ­ரு­மான விகாஸ் சிங், சிங்­கப்­பூர் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனனை வர­வேற்­ற­தாக 'த இண்­டி­யன் எக்ஸ்­பி­ரஸ்' தெரி­வித்­தது.

இந்­திய உச்ச நீதி­மன்­றத்­தின் 73வது ஆண்­டு­விழா நேற்று நடை­பெற்­றது. இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்­ப­தற்­காக தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் 'மாறி வரும் உல­கில் நீதித் துறை­யின் பங்கு' என்ற தலைப்­பில் அவர் உரை­யாற்­று­வ­தாக இந்­திய ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

இதில் தலைமை நீதி­பதி டி.ஒய். சந்­தி­ர­சூட், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள், மத்­திய அர­சின் மூத்த அதி­கா­ரி­கள், மூத்த வழக்­கு­ரை­ஞர்­கள், வழக்­க­றி­ஞர் சங்க உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் மற்­றும் மற்ற நீதி­ப­தி­க­ளு­டன் திரு சுந்­த­ரேஷ் மேனன் ஆலோ­சனை நடத்­த­வுள்­ள­தாக உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது. அப்­போது சட்­டக் கல்வி, நிதி வழங்­கல் உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் இந்­திய-சிங்­கப்­பூர் நீதி­மன்­றங்­கள் இடையே நல்­லு­றவை மேம்­ப­டுத்­து­வது குறித்து அவர்­கள் பேசு­வார்­கள் என தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­திய உச்ச நீதி­மன்­றம், 1950ஆம் ஆண்டு ஜன­வரி 28ஆம் தேதி நிறு­வப்­பட்­டது.