நிச்சயதார்த்த கொண்டாட்டம்: துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து இளையர் பலி

1 mins read
7afe9cb7-dd3c-4eb6-b134-4917126f8a87
திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ்­வில் பங்­கேற்ற ஒரு­வர் உற்­சா­கத்­தில் துப்­பாக்­கி­யால் வானத்தை நோக்­கிச் சுட்­ட­போது, அரு­கில் இருந்­த­வர் மீது குண்டு பாய்ந்து இறந்து போனார். படம்: பிக்ஸாபே -

லக்னோ: திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ்­வில் பங்­கேற்ற ஒரு­வர் உற்­சா­கத்­தில் துப்­பாக்­கி­யால் வானத்தை நோக்­கிச் சுட்­ட­போது, அரு­கில் இருந்­த­வர் மீது குண்டு பாய்ந்து இறந்து போனார். இது­கு­றித்து உத்­த­ரப் பிர­தேச காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் அங்­குள்ள புலந்த்­சா­கர் மாவட்­டத்­தில் அந்த நிச்­ச­ய­தார்த்த நிகழ்ச்சி விம­ரி­சை­யாக நடை­பெற்­றது.

அப்­போது விஷால் என்ற ஆட­வர் உற்­சாக மிகு­தி­யில் தாம் வைத்­தி­ருந்த உரி­மம் பெற்ற துப்­பாக்­கி­யைக் கொண்டு வானத்தை நோக்­கிச் சுட்­டார்.

அதைக் கண்டு அங்­கி­ருந்­த­வர்­கள் உற்­சா­கக் குர­லெ­ழுப்­பி­னர். இந்­நி­லை­யில் விஷால் தொடர்ந்து துப்­பாக்­கி­யால் சுட்­ட­போது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக அவ­ருக்கு அரு­கில் நின்­றி­ருந்த 24 வய­தான சரத், ராஜ்­கு­மார் ஆகி­யோர் மீது குண்டு பாய்ந்­தது. இத­னால் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த அனை­வ­ரும் அதிர்ச்­சி­யில் உறைந்­த­னர்.

குண்டு பாய்ந்து ரத்த வெள்­ளத்­தில் சாய்ந்த இரு­வ­ரை­யும் அங்­கி­ருந்­த­வர்­கள் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். எனி­னும் இளை­யர் சரத் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார். மற்­றொ­ரு­வ­ருக்குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.