புதுடெல்லி: விமான ஊழியர்களுக்குக் கட்டுப்படாத 63 பேருக்குக் கடந்த ஆண்டு விமானப் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிய மறுத்தது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்றவில்லை என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் கூறினார்.
இந்த 63 பேரில் 46 பேர் இண்டிகோ விமானப் பயணிகள் என்றும் 16 பேர் விஸ்தாரா பயணிகள் என்றும் ஒருவர் ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணி என்றும் அவர் விவரம் அளித்தார்.
2021ஆம் ஆண்டு இதேபோல 66 பேருக்குத் தடை விதிக்கப் பட்டது. ஆயினும், கொள்ளை நோய் பரவிய 2020ஆம் ஆண்டு 10 பேர் மட்டுமே தடைக்கு உள்ளாயினர்.

