உயர் கல்விக்காக ஆறு ஆண்டுகளில் வெளிநாடு சென்ற 30 லட்சம் பேர்

1 mins read
04fe4dcc-94b9-4167-bab1-8bb42287c3a6
-

புது­டெல்லி: கடந்த ஆறு ஆண்­டு­களில் மட்­டும் முப்­பது லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட இந்­திய மாண­வர்­கள் உயர்­கல்­விக்­காக வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்­றுள்­ள­னர். இத்­த­க­வலை மத்­திய அரசு நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

மத்­திய கல்­வித்­துறை இணை­ய­மைச்­சர் சுபாஷ் சர்க்­கார் எழுத்து மூலம் அளித்த பதி­லில் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். தமது பதி­லில் கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை­யி­லான காலத்­தில் 30 லட்­சத்­துக்­கும் அதி­க­மான இந்­தி­யர்­கள் உயர்­கல்­விக்­காக வெளி­நாடு சென்­றுள்­ள­தாக அவர் தெரிவித்தார்.

வெளி­நாடு செல்­வோர் வாய்­மொழி­யாகத் தெரி­விக்­கும் தக­வல், அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் மாண­வர்­க­ளுக்­கான விசா வகை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இந்­தத் தக­வலைத் தெரி­விப்­ப­தாக அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

"கடந்த ஆண்­டில் வெளி­நாடு சென்­ற­வர்­களில் 7.5 லட்­சம் பேர் உயர்­கல்­விக்­காகச் சென்­றுள்­ள­னர். இது­போல, 2021ஆம் ஆண்­டில் 4.4 லட்­சம், 2020ஆம் ஆண்­டில் 2.59 லட்­சம் பேர் உயர்­கல்வி பெற இந்­தி­யா­வில் இருந்து பல்­வேறு நாடு­களுக்­குச் சென்­றுள்­ள­னர்.

"2019இல் இந்த எண்­ணிக்கை 5.8 லட்­ச­மா­க­வும் 2018இல் 5.1 லட்­ச­மா­க­வும் 2017இல் 4.5 லட்­ச­மா­க­வும் உள்­ளது," என்று இணை­ய­மைச்­சர் சுபாஷ் சர்க்­கார் தெரி­வித்­தார்.