உப்புமாவும் பாஜக ஆட்சியும்: திருச்சி சிவா பேச்சால் சிரிப்பு

உப்புமாவும் பாஜக ஆட்சியும்: திருச்சி சிவா பேச்சால் சிரிப்பு

2 mins read
c49eee02-e146-4b99-8cf7-a3f70b5a72d7
-

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு நடை­பெற உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜ­க­வால் வெற்­றி­பெற முடி­யாது என திமுக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரான திருச்சி சிவா கூறி­யுள்­ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் எதிர்க்­கட்­சி­க­ளி­டம் ஒற்­றுமை இல்­லாத கார­ணத்­தால்­தான் பாஜக மீண்­டும் ஆட்­சி­ய­மைத்­தது என்று மாநி­லங்­க­ள­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மத்­திய அர­சை­யும் உப்­பு­மா­வை­யும் ஒப்­பிட்டு அவர் பேசி­ய­தால் அவை­யில் சிரிப்­பலை எழுந்­தது.

ஒரு கல்­லூரி விடு­தி­யில் பெரும்­பா­லான மாண­வர்­கள் உப்­பு­மாவை வெறுத்த போதி­லும், மீண்­டும் அதே உணவை அவர்­கள் சாப்­பிட நேரிட்­டது குறித்து அவர் தமது பேச்­சில் விவ­ரித்­தார்.

அக்­கு­றிப்­பிட்ட கல்­லூரி விடு­தி­யில் எப்­போ­தும் உப்­புமா மட்­டுமே பரி­மா­றப்­பட்டு வந்­த­தா­க­வும் இத­னால் எரிச்­ச­லான மாண­வர்­கள், உப்­புமா வேண்­டாம் என்று கூறி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் சிவா எம்பி குறிப்­பிட்­டார்.

"இதை­ய­டுத்து விடு­திக் காப்­பா­ளர் வாக்­கெ­டுப்பு நடத்­தி­னார். அதில் 7% பேர் ரொட்டி, முட்டை வேண்­டும் என வாக்­க­ளித்­த­னர். 13% பேர் பூரி­யும் 18% பேர் பரோட்­டா­வும் 19% பேர் மசாலா தோசை­யும் கேட்டு வாக்­க­ளித்­த­னர். இட்­லிக்கு இரு­பது விழுக்­காட்­டி­ன­ரின் ஆத­ரவு இருந்­தது. 23% பேர் மட்­டுமே உப்­புமா வேண்­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­த­னர். ஆனால் பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் மீண்­டும் உப்­பு­மாவே தேர்­வா­னது.

"அப்­ப­டித்­தான் உப்­பு­மா­வைப் போன்று பாஜக அரசு 2019ஆம் ஆண்டு மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தது," என்­றார் திருச்சி சிவா.

மாண­வர்­கள் (எதிர்க்கட்­சி­கள்) அனை­வ­ரும் ஒன்று சேர்­வார்­கள் என்று குறிப்­பிட்ட அவர், அதற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.