அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றம் விசாரணை

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றம் விசாரணை

2 mins read
4b8bc5f0-c558-4845-9695-72586c96827c
-

புது­டெல்லி: அதானி குழு­மம் மீதான முறை­கேடு புகார்­கள் குறித்து உச்ச நீதி­மன்­றம் இன்று முதல் விசா­ரணை நடத்த உள்­ளது. அதானி குழும நிறு­வ­னங்­கள் குறித்து ஹிண்­டன்­பர்க் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் குறித்து விசா­ரணை நடத்த உச்ச நீதி­மன்­றம் நேற்று ஒப்­பு­தல் வழங்­கி­யது.

ஹிண்­டன்­பர்க் அறிக்கை குறித்து விசா­ரணை நடத்­தக்­கோரி மூத்த வழக்­க­றி­ஞர் சர்மா உள்­ளிட்ட சிலர் உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனுக்­களைத் தாக்­கல் செய்­த­னர். தனது மனுவை அவ­சர வழக்­கா­கக் கருதி விசா­ரிக்க வேண்­டும் என சர்மா வலி­யு­றுத்தி இருந்­தார்.

இந்­நி­லை­யில், இன்று முதல் உச்ச நீதி­மன்­றத்­தில் அதானி குழும நிறு­வ­னங்­கள் தொடர்­பான மனுக்­கள் விசா­ரிக்­கப்­படும் என தலைமை நீதி­பதி அறி­வித்­துள்­ளார்.

முன்­ன­தாக ஹிண்­டன்­பர்க் அறிக்கை பொய்­யா­னது என்­றும் உள்­நோக்­கம் கொண்­டது என்­றும் தெரி­வித்த அதானி குழு­மம் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை மறுத்து 413 பக்­கங்­கள் கொண்ட மறுப்பு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதானி குழு­மம் மீதான குற்­றச்­சாட்­டு­களை உச்ச நீதி­மன்­றம் எத்­த­கைய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் விசா­ரிக்­கும் என்­பது குறித்து விசா­ரணை தொடங்­கிய பிறகே தெரிய வரும் என்­கி­றார்­கள் சட்ட நிபு­ணர்­கள்.

வழக்கு விசா­ர­ணை­யின் முதல் நட­வ­டிக்­கை­யாக, இவ்­வி­வ­கா­ரம் குறித்து உரிய பதில் அளிக்­கு­மாறு மத்­திய அர­சுக்­குத்­தான் உச்ச நீதி­மன்­றம் தனது முதல் நோட்­டீசை அனுப்­பும் என்­றும் அதற்கு மத்­திய அரசு எப்­படி பதில் அளிக்­கப் போகிறது என்­ப­தைப் பொறுத்தே வழக்கு விசா­ரணை நகர்­வு­கள் எப்­படி இருக்­கும் என்­பது தீர்­மா­ன­மா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, வங்­கி­களில் பெற்ற கடன்­களை முன்­கூட்­டியே திருப்­பிச் செலுத்த அதானி குழு­மம் முடிவு செய்­தி­ருப்­ப­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

முதற்­கட்­ட­மாக ஐநூறு மில்­லி­யன் தொகையை அந்­நி­று­வ­னம் வங்­கி­யில் செலுத்­தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஹால்­சிம் என்ற கட்­டு­மான நிறு­வ­னத்­தின் பங்­கு­களை வாங்­கு­வ­தற்கு மூன்று வங்­கி­க­ளி­டம் இருந்து அதானி குழு­மம் 4.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கட­னா­கப் பெற்­றி­ருந்­தது என்­றும் இந்­தக் கடன் தொகை­யில் ஒரு பகு­தியை மார்ச் 9ஆம் தேதிக்­குள் அந்­நி­று­வ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது என்­றும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் வங்­கி­க­ளின் மறு­நி­தி­ய­ளிப்பு நட­வ­டிக்கை தொடர்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய முட்­டுக்­கட்­டை­க­ளைக் களைய முடி­யும் என அதானி குழு­மம்் கருது­வ­தா­கத் தெரி­கிறது.

இது தொடர்­பாக வங்­கித் தரப்­பு­டன் பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்று வரு­வ­தாக அதானி குழும செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பங்­குச் சந்­தை­யில் அதானி நிறு­வ­னப் பங்­கு­களுக்குத் தொடர்ந்து நெருக்­கடி நிலவி வரு­கிறது. கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பெரும்­பா­லான அதானி குழும நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் சரி­வு­டன் முடி­வ­டைந்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­ப­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அதானி குழு­மம் மேற்­கொண்­டுள்­ளது.