அமலாக்கத் துறை நோட்டீஸ்: கர்நாடக காங்கிரசார் கொதிப்பு

அமலாக்கத் துறை நோட்டீஸ்: கர்நாடக காங்கிரசார் கொதிப்பு

1 mins read
981edc62-32f6-48ed-9087-02fad8358933
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநில காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவ­கு­மா­ருக்கு மத்­திய அம­லாக்­கத்­துறை நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளது. இத­னால் காங்­கிஸ் கட்­சி­யி­னர் மத்­தி­யில் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

கர்­நா­ட­கா­வில் மிக விரை­வில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இத்­த­கைய சூழ­லில் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான சிவ­கு­மா­ருக்கு அம­லாக்­கத்­துறை மூலம் பாஜக நெருக்­கடி கொடுப்­ப­தாக காங்­கி­ரஸ் சாடி உள்­ளது.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு சொத்­துக்­கு­விப்பு புகார்­களில் சிக்கினார் சிவகுமார்.

டெல்­லி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் இருந்து மட்­டும் கணக்­கில் வராத ரூ.8 கோடி ரொக்­கப் பணத்தை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்­நி­லை­யில், பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான விதி­மீ­றல்­களில் ஈடு­பட்­ட­தா­கக் ­கூறி சிவ­கு­மார் மீது அம­லாக்­கத்­துறை வழக்­குப்­ப­ப­திவு செய்­தது. அவர் கைது செய்­யப்­பட்டு, டெல்­லி­யில் திகார் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

அண்மையில் சிவ­கு­மா­ரின் மகள் ஐஸ்­வர்­யா­வி­ட­மும் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி உள்­ள­னர். அதன் அடிப்­ப­டை­யில் இரு­வ­ரி­ட­மும் விசா­ரணை நடத்த உள்­ள­தா­கக் குறிப்­பிட்டு அம­லாக்­கத்­துறை நோட்­டீஸ் அனுப்பி உள்­ளது.