திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்தது

1 mins read
7841c9e8-bec2-443a-ac22-7d3967e185ec
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வைச் சேர்ந்த திரு­நங்­கை தம்­ப­தி­யர்க்கு குழந்தை பிறந்­துள்­ளது. இந்­தி­யா­வில் இவ்­வாறு நடப்­பது இதுவே முதன்­முறை என ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

கேர­ளா­வைச் சேர்ந்த 21 வய­தான ஜியா பவல் ஆணா­கப் பிறந்து பெண்­ணாக மாறிய திரு­நங்கை ஆவார். இதே­போல் 23 வய­தான ஜஹாத் என்­ப­வர் பெண்­ணா­கப் பிறந்து ஆணாக மாறி­ய­வர் ஆவார்.

இவர்­கள் இரு­வ­ருமே சில பிரச்­சி­னை­கள் கார­ண­மாக இளம் வயதிலேயே தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­விட்­ட­னர். இந்­நி­லை­யில் நேரில் சந்­தித்­த­போது இரு­வ­ருக்­கும் இடையே காதல் மலர்ந்­தது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இணைந்து வாழ்ந்து வந்த நிலை­யில், மற்­ற­வர்­க­ளைப் போன்று தாங்­களும் குழந்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று விரும்­பி­னர்.

இதற்­காக மருத்­து­வரை அணு­கி­ய­போது, ஜஹாத் ஆணாக மாறி­விட்­ட­போ­தி­லும், பிறப்­பில் அவர் பெண் என்­ப­தா­லும் அவ­ரது கருப்பை அகற்­றப்­ப­டா­த­தா­லும் அவ­ரால் கருத்­த­ரிக்க இய­லும் என்று கூறி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து ஜஹாத் கர்ப்­பம் தரித்­தார். இந்நிலையில், ஜஹாத்துக்கு அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்துள்ளது என்றும் ஜியா தெரிவித்துள்ளார்.