'பசு அணைப்பு' தினத்தை அனுசரிக்க வலியுறுத்து

'பசு அணைப்பு' தினத்தை அனுசரிக்க வலியுறுத்து

1 mins read
c8017e87-137e-4426-831b-bd360817c718
-

புது­டெல்லி: அன்­பர் தினத்தை கொண்­டா­டு­வோர் பசு அணைப்பு தினத்­தை­யும் கொண்­டாட வேண்­டும் என விலங்­கு­கள் நல வாரி­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் 14ஆம் தேதி அன்­பர் தினம் கொண்­டா­டப்­பட உள்­ளது. அன்­றைய தினம் காத­லர்­கள் உற்­சாக வலம் வரு­வர்.

இந்­நி­லை­யில், அன்­பர் தினத்­தன்று விலங்­கு­க­ளி­ட­மும் அன்பு பாராட்ட வேண்­டும் என விலங்­கு­கள் நல வாரி­யம் கூறு­கிறது. இதை­ய­டுத்து, மீன்­வளம், கால்­நடை பரா­ம­ரிப்பு மற்­றும் பால்­வ­ளத்­துறை அமைச்சு, இந்­திய விலங்­கு­கள் நல வாரி­யத்­து­டன் இணைந்து பசு அணைப்பு தினத்தை அறிமு­கப்­ப­டுத்தி உள்­ளது.

"இந்­திய கலா­சா­ரம், கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரத்­தில் பசுக்­க­ளின் முக்­கி­யத்­து­வம் ஆகி­ய­வற்றை எடுத்­து­ரைப்­ப­தற்­காக பசு அணைப்பு தினம் கொண்­டா­டப்­பட வேண்­டும்.

"யோகா தினத்­தைப் போன்று, 'பசு அணைப்பு தினத்தை' அனு­ச­ரிக்க வேண்­டும், தாய் பசு­வின் முக்­கி­யத்­து­வத்தை மன­தில் கொண்­டும் வாழ்க்­கையை மகிழ்ச்­சி­யா­னதாக மாற்­றும் வகை­யில், பசு அணைப்பு தினம் அனுசரிக்க வேண்டும்," என விலங்குகள் நல வாரியம் கூறி­யுள்­ளது.