வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

1 mins read
4fe22d43-7c08-4ce1-975a-f220576daf42
-

புது­டெல்லி: இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிலை­ய­மான இஸ்ரோ நேற்று 'எஸ்­எஸ்­எல்வி டி 2' ரக ராக்­கெட்டை வெற்­றி­க­ர­மாக விண்­ணில் செலுத்­தி­யது.

ஆந்­திர மாநி­லம் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள சதீஷ் தவான் விண்­வெளி ஏவு­த­ளத்­தில் இருந்து இந்த ராக்­கெட் நேற்று காலை 9.18 மணிக்கு வெற்­றி­க­ர­மாக விண்­ணில் செலுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து, இஸ்‌ரோ குழு­வி­ன­ருக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் வாழ்த்­தும் பாராட்­டும் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்­கைக்­கோள்­க­ளைச் சுமந்­து­செல்­லும் எஸ்­எஸ்­எல்வி-டி1 ரக ராக்­கெட்டை விண்­ணில் செலுத்­தி­யது இஸ்‌ரோ. எனி­னும், திடீர் தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக செயற்­கைக்­கோள்­க­ளைத் திட்­ட­மிட்ட இலக்­கில் நிலை­நி­றுத்த முடி­யா­மல் போனது.

இதை­ய­டுத்து மீண்­டும் முயற்சி மேற்­கொண்ட இஸ்ரோ உள்­நாட்­டில் வடி­வ­மைக்­கப்­பட்ட, மேம்­ப­டுத்­தப்­பட்ட எஸ்­எஸ்­எல்வி டி2 ரக ராக்­கெட்டை நேற்று ஏவி­யது.

34 மீட்­டர் உய­ர­மும் 2 மீட்­டர் விட்­ட­மும் கொண்­ட­தா­கச் சிறிய அள­வில் வடி­வ­மைக்­கப்­பட்ட இந்த ராக்­கெட், மொத்­தம் 334 கிலோ எடை கொண்ட மூன்று செயற்­கைக்­கோள்­க­ளைச் சுமந்து சென்­றது.

இந்த ராக்­கெட்­டில் பூமி கண்­கா­ணிப்பு செயற்­கைக்­கோ­ளான இ.ஓ.எஸ்.07, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஆய்வு நிறு­வ­னத்­தின் 22.7 கிலோ எடை கொண்ட ஜானஸ் -1 செயற்கை கோள், சென்­னையை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு செயல்­படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்­தின் ஆசாதி சாட்- 2 செயற்­கைக்­கோள் ஆகி­யவை இடம்­பெற்­றுள்­ளன.