'$5 டிரில்லியன் பொருளியல் இலக்கு சாத்தியமாகும்'

'$5 டிரில்லியன் பொருளியல் இலக்கு சாத்தியமாகும்'

1 mins read
31c62f7c-3099-4d79-bed1-8979a03b0381
-

லக்னோ: உலக அரங்­கில் இந்­தியா ஒரு பிர­கா­ச­மான இட­மாக மாறி­ய­து­போல் உத்­த­ரப் பிர­தேச மாநி­ல­மும் மாற்­றம் கண்­டுள்­ளது என பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடை­பெற்று வரும் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் கலந்துகொண்டு உரை­யாற்­றிய அவர், தொழில் துறை­யி­னர், உல­கம் முழு­வ­தும் உள்ள தலை­வர்­கள் வருகை தரு­வ­தன் மூலம் வர்த்­தக வாய்ப்­பு­கள், கூட்­டாண்­மைக்­கான வழி­மு­றை­கள் குறித்து ஆரா­யப்­படும் என்­றார்.

ஐந்து டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­யல் என்ற இந்தியாவின் இலக்கு சாத்தியமாகும் என்று அதற்கு முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு கைகொ­டுக்­கும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தெரி­வித்­தார்.

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி பொருளியல் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய மாநாடுகள் மூலம் உத்தரப் பிரதேசம் மாநிலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும் என்றார்.

இதற்கிடையே, சிறு குறு தொழில்துறையில் மட்டும் உத்தரப் பிரதேசத்துக்கு மேலும் ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது.

பிற துறைகளிலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்ப்பதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.