சிறார் திருமண விவகாரம்: கைது நடவடிக்கையால் குடும்பங்கள் சீர்குலைந்ததாகப் புகார்

சிறார் திருமண விவகாரம்: கைது நடவடிக்கையால் குடும்பங்கள் சீர்குலைந்ததாகப் புகார்

1 mins read
da5727a7-bc88-476b-aa26-c9fbfc8085d7
-

கௌஹாத்தி: அசாம் மாநி­லத்­தில் சிறார் திரு­ம­ணத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலை­யில், அங்கு கடந்த ஓராண்­டில் மட்­டும் 6.2 லட்­சம் சிறு­மி­கள் கரு­வுற்­றது தெரி­ய­வந்­துள்­ளது.

சிறார் திரு­ம­ணம் தொடர்­பாக கைதா­னோர் எண்­ணிக்கை 2,763 ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் எதிர்­வ­ரும் 2026ஆம் ஆண்­டுக்குள் குழந்தைத் திரு­ம­ணத்தை முற்­றி­லும் ஒழிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் அசாம் அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மாநில அர­சின் நட­வ­டிக்­கை­யால் தவறு செய்­யா­த­வர்­களும் தண்­டிக்­கப்­ப­டு­வ­தாக ஒரு தரப்­பி­னர் குரல் எழுப்பி உள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்ட பெண்­களை காவல்­துறை மீட்­ட­தா­கக் கூறப்­படும் நிலை­யில், அமை­தி­யான தங்­கள் வாழ்க்கை சீர்­கு­லைந்­து­விட்­ட­தாக பல பெண்­கள் கூறு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

பௌச­தாரி கிரா­மத்­தைச் சேர்ந்த ஜஹா­நரா கத்­துன் என்ற பெண் கூறு­கை­யில், கடந்த 2018ஆம் ஆண்டு 17 வய­தில் தாம் மொஹம்­மட் அஹி­ருல் என்­பவரைக் காத­லித்து மணந்­த­தா­க­வும் 2021ல் ஒரு பெண் குழந்தை­யைப் பெற்­றெ­டுத்­ததா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

"நான் நிம்­ம­தி­யாக வாழ்ந்து வந்த நிலை­யில், பாதிக்­கப்­பட்ட பெண்­களில் நானும் சேர்க்­கப்­பட்­டுள்­ளேன். என் கண­வ­ரை­யும் மாம­னா­ரை­யும் கைது செய்­த­னர்," என்­றார்.

"காவல்­துறை நட­வ­டிக்­கை­யால் பல குடும்­பங்­கள் பிரிந்­து­விட்­டன. சம்­பா­திக்­கும் குடும்ப உறுப்­பி­னர்­கள் கைதாகி சிறை­யில் உள்­ள­தால் ஏற்­கெ­னவே ஏழ்மை நிலை­யில் உள்ள குடும்­பங்­கள் தவிப்­புக்கு ஆளாகி உள்­ளன. இத­னால் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது," என ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.