உ.பி.யில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம்

உ.பி.யில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம்

1 mins read
5142faa4-7456-4cbf-b62c-040ce025bf17
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநிலத்தில் ரிலை­யன்ஸ் குழு­மம் ரூ.75,000 கோடி முத­லீடு செய்­யும் என அதன் தலை­வர் முகேஷ் அம்­பானி அறி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, நாட்­டின் முன்­னணி தொழி­ல­தி­பர்­கள் பல­ரும் அம்­மா­நி­லத்­தில் முத­லீடு செய்ய உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

உத்­த­ரப் பிர­தேச அரசு ஏற்­பாடு செய்­தி­ருந்த அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டை­யொட்டி முகேஷ் அம்­பா­னி­யின் அறி­விப்பு வெளி­யா­னது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ரிலை­யன்ஸ் நிறு­வ­னம் அம்­மா­நி­லத்­தில் முத­லீட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்­றார் அவர்.

சில்­லறை வணி­கம், புதுப்­பிக்­கத்­தக்க எரி­ஆற்­றல் உள்­ளிட்ட துறை­களில் ரிலை­யன்ஸ் முத­லீடு செய்­கிறது.

இதற்­கி­டையே, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஆதித்ய பிர்லா குழு­மம் ரூ.25,000 கோடி முத­லீடு செய்­கிறது. அம்­மா­நி­லம் பெரும் மாற்­றங்­க­ளை அடைந்து வரு­கிறது என்­றும் இத­னால் முத­லீட்­டா­ளர்­கள் குவி­கின்­ற­னர் என்­றும் அக்­கு­ழு­மத்­தின் தலை­வர் குமார் மங்­க­லம் பிர்லா கூறி­யுள்­ளார்.

டாடா சன்ஸ் குழு­மத்­தின் 18 நிறு­வ­னங்­கள் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் கிளை­ப­ரப்பி உள்­ளன என்­றும் ஏறத்­தாழ 50 ஆயி­ரம் பேர் வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுள்­ள­னர் என்­றும் அதன் தலை­வர் என்.சந்­தி­ர­சே­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

உத்­தரப் பிர­தேச மாநி­லத்­தின் அனைத்து முக்­கிய நக­ரங்­க­ளை­யும் நாட்­டின் பிற முக்­கிய பகு­தி­களு­டன் இணைக்­கும் திட்­டத்தை ஏர் இந்­தியா நிறு­வ­னம் மேற்­கொள்­ளும் என்­றார் அவர்.