கார்கே: சுதந்திரம் இல்லை

கார்கே: சுதந்திரம் இல்லை

1 mins read
e58c7387-ea5b-45f9-a72f-6e7eebd653af
-

புது­டெல்லி: பாஜக ஆட்­சிக்கு வந்­தது முதல் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­யும் ஏழ்­மை­யும் அதி­க­ரித்­துள்­ள­தாக காங்­கி­ரஸ் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே குற்­றம்­சாட்டி உள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் பேச்சு சுதந்­தி­ரம் இல்லை என்று டெல்­லி­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார். அர­சுக்கு எதி­ரா­கப் பேச துணி­ப­வர்­கள் கம்பி­க­ளுக்குப் பின்­னால் தள்­ளப்­படு­கி­றார்­கள் என்­றார் கார்கே.

"கடந்த 2014ஆம் ஆண்டு பண­வீக்­கத்தைக் குறைப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்து பாஜக ஆட்சிக்கு வந்­தது. ஆனால் அதைச் செய்­ய­வில்லை.

"நாட்­டின் சுதந்­தி­ரத்­திற்­காக காங்­கி­ரஸ் போரா­டி­யது. காங்­கி­ரஸ் அரசு நாட்­டின் உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­தி­யது. எனவே நாடு முழு­வ­தும் வீடு வீடா­கச் சென்று இது­கு­றித்து மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வோம்," என்­றார் கார்கே.