மோடி: புதிய உயரங்களையும் கடந்து செல்கிறது இந்தியா

மோடி: புதிய உயரங்களையும் கடந்து செல்கிறது இந்தியா

2 mins read
cf53e161-45f9-4ec5-9e6b-4a7a524919fd
-

'பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு'

பெங்களூரு: இந்­தியா தற்­போது புதிய உய­ரங்­க­ளைத் தொட்­டுள்­ளது­டன், அவற்­றை­யும் கடந்து சென்று கொண்­டி­ருப்­ப­தாக பிரதமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரில் நேற்று ஏரோ இந்­தியா விமான கண்­காட்­சி­யைத் தொடங்கி வைத்­துப் பேசிய அவர், அக்­கண்­காட்சி இந்­தி­யாவின் வளர்ச்­சிக்கு சிறந்த எடுத்­துக்­காட்டு என்­றார்.

பல தலை­மு­றை­க­ளாக இந்தியா பாது­காப்­புத் துறைக்கு தேவைப்­பட்ட அனைத்­தை­யும் இறக்­கு­மதி செய்து கொண்­டி­ருந்­தது என்று குறிப்­பிட்ட பிரதமர், தற்­போது 75 நாடு­க­ளுக்கு பாது­காப்பு தள­வா­டங்­களை ஏற்­று­மதி செய்­யும் நாடாக இந்­தியா மாறி­உள்­ளது என்­றார்.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் மட்­டும், இந்த ஏற்­று­ம­தி­யா­னது ஆறு மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.

புதிய இந்­தி­யா­வின் திறமைக்கு பெங்­க­ளூ­ரு­வின் வான்­வெளி சாட்­சி­யாகி உள்­ளது என்­றும் இந்­தக் கண்­காட்­சி­யில் நூறு நாடு­கள் பங்­கேற்­றி­ருப்­பது உல­க ­நா­டு­கள் மத்­தி­யில் இந்தி­யா­வின் மதிப்பு அதி­க­ரித்­தி­ருப்­பதைக் காட்­டு­கிறது என்­றும் பிர­த­மர் மோடி கூறி­னார்.

"ஏரோ இந்­தியா' கண்­காட்சி இந்­தி­யா­வின் புதிய அணு­கு­முறையை வெளிப்­ப­டுத்­து­கிறது. இது வெறும் கண்­காட்சி மட்டும் இல்லை. இது இந்­தி­யா­வின் பலம். இக்­கண்­காட்­சி­யில் பங்­கேற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்தகால சாத­னை­கள் அனைத்­தையும் முறி­ய­டித்­துள்­ளது," என்­றார் பிர­த­மர் மோடி.

இந்­தி­யா­வின் குறிக்­கோள்

இதற்­கி­டையே, துடிப்­பான, உல­கத் தரம் வாய்ந்த உள்­நாட்டு பாது­காப்­புத் துறையை உரு­வாக்கு­வதே மத்­திய அர­சின் குறிக்­கோள் என மத்­திய அமைச்சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரு­வில் 'ஏரோ இந்­தியா 2023' நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், எதிர்­வரும் 2024ஆம் ஆண்­டுக்­குள் பாது­காப்பு துறை சார்ந்த ஏற்­று­மதி மதிப்பை 25,000 கோடி ரூபா­யாக உயர்த்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

பாது­காப்­புத் துறை­யில் இந்தியாவை தன்­னி­றைவு அடை­யச் செய்­வதே அரசின் இலக்கு என்று தெரி­வித்த அவர், அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள அரசு உறுதி பூண்­டுள்­ளது என்­றார்.

"இதன் மூலம் நாடு வளர்ச்சி காணும். இந்த நிகழ்­வில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட நட்பு நாடு­கள், 800 கண்­காட்­சி­யா­ளர்­கள் பங்­கேற்­கின்­ற­னர். 'ஏரோ இந்­தியா 2023' ஒரு பெரிய நிகழ்­வாக இருக்­கும் என்று நாங்­கள் கற்­பனை செய்­தோம். ஆனால், அதை­யும் கடந்த பிரம்­மாண்­ட­மான நிகழ்­வாக உரு­வெ­டுத்­துள்­ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.