தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யோகி: ரூ.33.50 லட்சம் கோடி முதலீடுகள் திரண்டன

1 mins read
e4100ed0-505e-4ac4-bdf5-5e0a87a3cb3f
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநிலத்­தில் நடை­பெற்ற அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டின் மூலம் ஏறத்­தாழ 95 லட்­சம் புதிய வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என அம்­மா­நில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் தெரி­வித்­துள்­ளார்.

மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அவர், பல்வேறு முதலீட்டாளர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.33.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"இந்த முத­லீ­டு­கள் மாநில வளர்ச்­சிக்­குப் பெரு­ம­ளவு உத­வும் என்­றும் இதன் மூலம் முத­லீட்­டுக்குப் பாது­காப்­பான மாநி­ல­மாக உத்­த­ரப் பிர­தே­சம் உரு­வெ­டுத்­துள்­ளது என்­றும் முதல்­வர் யோகி கூறி­னார்.

மேலும், முன்பு தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேச பகுதிகளில் மட்டுமே முதலீடுகள் குவிந்ததாகவும் இப்போது மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் புதிய முதலீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தொழில்­மு­னை­வர் ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தி­டும் நிலை முதல் களத்­தில் தங்­கள் முத­லீட்டை வழங்­கு­வது வரை அவர்­களுக்கு உத­வு­வ­தற்­காக 'ஊக்­கு­விப்பு கண்­கா­ணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்­ப­டை­யான ஒற்றைச் சாளர அமைப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன," என்­றார் முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத்.