மத்திய அரசு: நிபுணர் குழுவை அமைப்பது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை

மத்திய அரசு: நிபுணர் குழுவை அமைப்பது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை

2 mins read
1cc84fca-5498-4ef3-9897-2ee06bb5ecba
-

புது­டெல்லி: அதானி விவ­கா­ரம் தொடர்­பாக நிபு­ணர் குழு விசா ரிக்க எந்­த­வித ஆட்­சே­ப­னை­யும் இல்லை என்று உச்ச நீதிமன்­றத்­தில் மத்­திய அரசு தக­வல் தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் ஹிண்­டன் பர்க் ஆய்வு நிறு­வன அறிக்கை யால், அதானி நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் ஒரு சில நாள்­க­ளுக்­குள் 120 பில்­லி­யன் டாலரை இழந்­தது. இத­னால், ஆயி­ரக்­கணக்­கான முத­லீட்­டா­ளர்­கள் பேரி­ழப்­புக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஹிண்­டன்­பர்க் ஆய்வு நிறு­வன அறிக்­கை­யின் உண்­மைத் தன்மை குறித்து ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மை­யில் குழு அமைத்து விசா­ரணை நடத்­த­வேண்­டும் என உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இது­கு­றித்து மத்­திய அர­சின் சார்­பில் முன்­னி­லை­யான சொலி­சிட்­டர் ஜென­ரல் துஷார் மேத்தா உச்ச நீதி­மன்­றத்­தில் பதி­ல­ளித்­த­போது, ''எதிர்­கா­லத்­தில் முத­லீட்­டா­ளர்­கள் நலன் பாதுகாக்­கப்­படு­வதை உறுதி செய்ய உச்ச நீதி­மன்­றம் குழுவை அமைத்­தால் அதில் மத்­திய அர­சுக்கு எவ்­வித ஆட்­சே­ப­னை­யும் இல்லை. இவ்­வி­வ­கா­ரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்­ளது,'' என்று தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து, அடுத்­த­கட்ட விசா­ர­ணையை வரும் வெள்­ளிக் கிழ­மைக்கு உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் ஒத்­தி­வைத்­த­னர்.

இந்­நி­லை­யில், ஹிண்­டர்ன்­பர்க் - அதானி விவ­கா­ரம் குறித்து பாஜக எதை­யும் மறைக்கவோ அல்­லது யாரைப் பார்த்­தும் பயப்­படவோ இல்லை என்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா விளக்­கம் அளித்­துள்­ளார்.

இத­னி­டையே, தனது சொந்த தொகு­தி­யான கேர­ளா­வின் வய­நாட்­டுக்­குச் சென்ற காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி, "பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் அதா­னிக்­கு­மான தொடர்பை நாட்டு மக்­கள் தெரிந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம் என்­ப­தால், இந்த விஷ­யத்தை நாடா­ளு­மன்­றத்­தில் பேசி வரு­வ­தாக தெரி­வித்­தார்.

மோடி­யு­டன் சேர்ந்து அதானி வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் சென்­ற­போ­தெல்­லாம் அவ­ருக்கு அந்­நா­டு­க­ளின் ஒப்­பந்­தங்­கள் கிடைத்­தது எப்­படி என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் அதானி விவ­கா­ரம் குறித்­துப் பேசும்­போதெல்­லாம் பிர­த­மர் மோடி எத்­தனை முறை தண்­ணீர் குடிக்­கி­றார் என்று பாருங்­கள் என்று கூறிய அவர், தண்­ணீர் குடிக்­கும்­போது பிர­த­ம­ரின் கைகள் நடுங்­கு­வதை கவ­னி­யுங்­கள் என்­றும் கூறி­னார்.

அதானி விவ­கா­ரத்­தில் ஒரு­நாள் உண்மை வெளி­வந்தே தீரும் என்று கூறிய ராகுல் காந்தி, பிர­த­மரை குற்­றம் சாட்­டிப் பேசி­னா­லும் தனது பேச்சு மிக­வும் கண்­ணி­ய­மாக இருந்­த­தா­கக் ­கூறி­னார்.