யுஎஸ்-இந்தியா உறவு; பைடன், மோடி பேச்சு

யுஎஸ்-இந்தியா உறவு; பைடன், மோடி பேச்சு

2 mins read
25511fe9-83b7-418f-b96b-4881caf7d186
அமெ­ரிக்க, இந்­திய உற­வின் முக்­கி­யத்­து­வம் குறித்து அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் இந்­திய பிர­த­மர் மோடி­யும் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: அமெ­ரிக்க, இந்­திய உற­வின் முக்­கி­யத்­து­வம் குறித்து அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் இந்­திய பிர­த­மர் மோடி­யும் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வின் போயிங் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ஏர் இந்­தியா நிறுவனம், 220 விமா­னங்­களை வாங்க ஒப்­பந்­தம் செய் துள்ள வேளை­யில் இரு தலை­வர்­களும் நேற்று முன்­தி­னம் தொலை­பேசி வழி­யாக கலந்­து­ரை­யா­டி­னர்.

ஏர் இந்­தியா வாங்­கும் விமா­னங்­க­ளின் மதிப்பு 34 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர். மேலும் 70 விமா­னங்­கள் வாங்­க­வும் ஒப்­பந்­தத்­தில் வழி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பா­க­வும் பேசிய பிர­த­மர் மோடி­யும் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும்

இந்­தியா- அமெ­ரிக்கா இடை­யி­லான உறவு, புதிய திட்­டங்­கள், உல­க­ளா­விய பங்­க­ளிப்பு குறித்­து விவா­தித்­த­னர்.

ஏர் இந்­தியா-போயிங் ஒப்­பந்­தத்தை வர­வேற்ற இரு தலை­வர்­களும், இந்த ஒப்­பந்­தம், இரு நாடு­க­ளி­லும் புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கும்' என்று நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான நல்­லு­ற­வுக்கு இந்த ஒப்­பந்­தம் ஒரு பிர­கா­ச­மான முன் உதா­ர­ணம் என்­று பிர­த­மர் அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் சிவில் விமான போக்­கு­வ­ரத்துத் துறை­யில் ஏற்­பட்­டுள்ள புதிய வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வரு­மாறு போயிங் உள்­ளிட்ட அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்குப் பிர­த­மர் மோடி அழைப்பு விடுத்­துள்­ளார்.

விண்­வெளி, கணினி சில்லு உற்­பத்தி தொழில்­நுட்­பம், விநி­யோக சங்­கிலி ஏற்­ப­டுத்­து­தல், பாது­காப்­புக் கூட்டு உற்­பத்தி, புது­மை­யான சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு கொண்ட தொழில்­நுட்­பங்­கள் தொடர்­பான துறை­களில் இரு தரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­த­வும் இரு தலை­வர்­களும் உறுதி பூண்­ட­னர்.

இதற்­கி­டையே அமெ­ரிக்­கா­வுக்கு வரு­மாறு திரு ஜோ பைடன் மோடிக்கு அழைப்பு விடுத்­துள்­ள­தா­க­வும் தகவல் வெளியாகி உள்ளது.

இம்­முறை உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தியாவில் நடைபெறும் 'ஜி-20' மாநாட்டுக்கு இந்­தியா தலைமை ஏற்­றுள்­ளது.

அதன் பொறுப்­பு­களை வெற்­றி ­க­ர­மாக கையாள எப்­போ­தும் தொடர்­பில் இருப்­பது என்று இரு தலை­வர்­களும் உறுதி தெரிவித்து உள்ளனர்.