தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

307 திருடப்பட்ட தொல்பொருள்கள்

1 mins read
add367c3-7bf0-4533-9f51-d331e6ec48dd
-

சென்னை: இந்­தி­யா­வி­லி­ருந்து திரு­டப்­பட்டு அமெ­ரிக்­கா­விற்கு அனுப்­பப்பட்ட பல தொல் ­பொருள்­கள் மீண்­டும் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன. கிட்­டத்­தட்ட 307 சிலை­கள் இந்­தி­யா­வில் ஒப்­ப­டைக்­கப்­படும் என்று இந்­திய தொல்­பொ­ருள் ஆய்­வ­கம் தெரி­வித்­துள்­ளது.

தொல்­பொ­ருள்­களை ஆய்வு செய்ய இந்­தி­யா­வி­லி­ருந்து குழு ஒன்று அமெ­ரிக்­கா­விற்கு அனுப்பிவைக்­கப்­பட்­டுள்­ளது.

தொல்­பொ­ருள்­கள் குறித்த அனைத்து தக­வல்­களும் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் தொல்­பொ­ருள்­கள் இந்­தி­யாவை வந்­த­டைய ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

500 ஆண்­டு­கள் பழ­மை­யான வெண்­கல ஆஞ்­ச­நே­யர் சிலை, எட்­டாம் நூற்­றாண்­டுக்­கும் 12ஆம் நூற்­றாண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் செதுக்­கப்­பட்ட கௌதம புத்­தர் சிலை, பளிங்குத் தூண் ஒன்று, வாள் ஒன்று போன்ற தொல்­பொ­ருள்­கள் இந்­தி­யா­வின் பல்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து திரு­டப் ­பட்டு அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.