திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக கடந்த நான்கு ஆண்டுகளாக சுப்பா ரெட்டி இருந்து வருகிறார்.
அவரது பதவிக் காலம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால் அவர் மீண்டும் தலைவராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அறங்காவலர் குழுத் தலைவரை மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கு திருப்பதி எம்.எல்.ஏ கருணாகரரெட்டி அல்லது கங்கா கிருஷ்ணமூர்த்தி யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமலையில் உள்ள அன்னமைய்ய பவனில் அறங் காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

