மகாராஷ்டிராவில் நிலத்துக்குள் இருந்து எழுந்த அதிசய ஒலி: நிலநடுக்க வதந்தியால் பீதியடைந்த பொதுமக்கள்

மகாராஷ்டிராவில் நிலத்துக்குள் இருந்து எழுந்த அதிசய ஒலி: நிலநடுக்க வதந்தியால் பீதியடைந்த பொதுமக்கள்

1 mins read
164150be-ea4b-47a4-9774-462a59b1c71c
-

லத்­தூர்: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள லத்­தூ­ரில் பூமிக்கு அடி­யில் விவ­ரிக்க முடி­யாத வகை­யில் சத்­தம் கேட்­டுள்­ளது. ஆனால், நில அதிர்வு எது­வும் பதி­வா­க­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்த மர்ம ஒலி­யா­னது புதன்­கி­ழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடை­யில், விவே­காந்தா சவுக் அரு­கில் கேட்­டுள்­ளது. இத­னால் நில­ந­டுக்­கம் வந்­து­விட்­ட­தாக பர­விய வதந்­தி­யால் பொது­மக்­கள் பீதி­ய­டைந்­த­னர். ஆனால், நில­ந­டுக்­கம் ஏது­வும் பதி­வா­க­வில்லை என்­பதை அதி­கா­ரி­கள் உறுதி செய்­த­னர்.

இது­கு­றித்து மாவட்ட பேரி­டர் மேலாண்­மைத்­துறை அதி­காரி, சாபேப் உஸ்­மானி கூறு­கை­யில், "மாரத்­வாடா பகு­தி­யில் அவ்­வப்­போது சில மர்ம ஒலி­கள் பதி­வா­கி­யுள்­ளன என்று தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, இந்­தாண்டு பிப்­ர­வரி 4 ஆம் தேதி மாவட்­டத்­தின் நிலங்கா வட்­டத்­தில் நித்­தூர் தங்­க­வாடி என்­னும் சிற்­றூர்ப் பகு­தி­களில் இது­போன்ற ஒலி­ கேட்­டது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம், லத்­தூர் மாவட்­டத்­தின் ஹசோரி, கில்­லாரி மற்­றும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் இது­போன்ற ஒலி­ மூன்று முறை கேட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மரத்­வாடா வட்­டா­ரத்­தி­லும் அவ்­வப்­போது இது­போன்ற ஒலி கேட்­கும் என்­றும் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். 1993ஆம் ஆண்­டில் கில்­லாரி பகுதி மற்­றும் அதன் சுற்­றுப்­பு­றங்­களில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தால் பத்­தா­யி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.