கல்வியின் அவசியம் உணர்த்திய ருக்மிணி; குழந்தை பெற்ற கையோடு தேர்வெழுதினார்

கல்வியின் அவசியம் உணர்த்திய ருக்மிணி; குழந்தை பெற்ற கையோடு தேர்வெழுதினார்

2 mins read
113b1a67-ce54-4b9c-a398-b169832d37da
-

பாட்னா: சில­ருக்­குத் தேர்வு என்­பதே வலி­மி­குந்த விஷ­ய­மாக இருக்­க­லாம். ஆனால், வலி­யோடு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்து, அடுத்த மூன்று மணி நேரத்­தில் பத்­தாம் வகுப்­புப் பொதுத் தேர்­வெ­ழுதி அனை­வ­ரை­யும் வியக்க வைத்­துள்­ளார் இந்­தி­யா­வைச் சேர்ந்த இளம்­பெண் ஒரு­வர்.

ருக்­மிணி குமாரி, 22 (படம்), என்ற இப்­பெண்­ணுக்கு எப்­ப­டி­யா­வது படிப்பை முடித்­து­விட்டு, நல்ல வேலைக்­குச் செல்ல வேண்­டும் என்­பது விருப்­பம்.

பீகார் மாநி­லம், பாங்கா மாவட்­டத்தைச் சேர்ந்த திரு­வாட்டி ருக்­மிணி கடந்த செவ்­வாய்க்­கிழமை கணி­தத் தேர்வை எழு­தி­னார்.

அன்­றி­ரவே இவ­ருக்­குப் பிர­சவ வலி தொடங்­கி­விட்­டது. ஆனா­லும், மறு­நா­ளும் தேர்­வு எழு­து­வ­தில் உறு­தி­யாக இருந்த இவர், மூன்று மணி நேரத்­திற்கு முன்­ன­தா­கவே தேர்வு மையத்­திற்­குச் சென்­று­விட்­டார்.

பிர­சவ வலி­யோடு தேர்­வுக்­கூ­டத்­தில் சென்று அமர்ந்­து­விட்­டார் திரு­வாட்டி ருக்­மிணி. ஆனா­லும், பொறுக்க முடி­யாத அள­விற்கு வலி எடுத்­த­தால், உட­ன­டி­யாக அது­பற்றி அதி­காரி­க­ளி­டம் சொன்­னார்.

அத­னைத் தொடர்ந்து, விரைந்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட இவர், அங்கு நல்ல முறை­யில் ஆண் குழந்­தையை ஈன்­றெ­டுத்­தார்.

அதன்­பின், தான் எப்­ப­டி­யா­வது தேர்­வெ­ழு­தி­விட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்த திரு­வாட்டி ருக்­மிணி, தம்­மைத் தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கும்­படி சுகா­தா­ரம் மற்­றும் கல்­வித்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் கோரிக்கை விடுத்­தார். திரு­வாட்டி ருக்­மி­ணி­யின் வேண்­டு­கோள் ஏற்­கப்­ப­டவே, அவர் மீண்­டும் தேர்வு மையத்­திற்­குச் சென்று, அறி­வியல் தேர்வை எழு­தி­னார்.

அவ­சர அழைப்பு வந்­ததை அடுத்து, திரு­வாட்டி ருக்­மிணிக்­கான மகப்­பேற்று அறை தயார்­நிலையில் வைக்­கப்­பட்­டிருந்­த­தாக டாக்­டர் போலா நாத் கூறி­னார். துணிச்­ச­லு­டன் சென்று தேர்­வெ­ழு­திய திருவாட்­டி ருக்­மி­ணி­யைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­றனர்.