சிறையில் எம்எல்ஏ உல்லாசம்; மூன்று நாள் காவலில் மனைவி

சிறையில் எம்எல்ஏ உல்லாசம்; மூன்று நாள் காவலில் மனைவி

2 mins read
f1ffa4cc-35ef-43ce-9210-375165d2188b
-
multi-img1 of 2

லக்னோ: சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் அப்­பாஸ் அன்­சாரி என்ற எம்­எல்ஏ, தன் மனை­வி­யோடு சிறைக்­குள் உல்­லா­ச­மாக குடும்­பம் நடத்தி வந்­தது உறுதி யானதை அடுத்து இம்­மா­தம் 10ஆம் தேதி அவ­ரது மனைவி கைது செய்­யப்­பட்­டார்.

இவ்­வ­ழக்கை காணொ­ளிச் சந்­திப்பு மூலம் விசா­ரித்த லக்னோ நீதி­மன்ற சிறப்பு நீதி­பதி லோகேஷ் வருண், நேற்று வெள்ளி முதல் மூன்று நாள்­களுக்கு எம்­எல்­ஏ­வின் மனைவி நிகத் பானுவையும் அவர்களது ஓட்­டு­நர் நியாஜ் அக­ம­துவை ஐந்து நாள்­க­ளுக்­கும் காவ­லில் வைக்க உத்­த­ர­விட்­டார்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் பார­திய சுஹல்­தேவ் சமாஜ்­வாதி கட்­சி­யின் எம்­எல்­ஏ­வாக இருப்ப வர் அப்­பாஸ் அன்­சாரி. இவர், பண மோசடி வழக்­கில் கடந்த மூன்று மாதங்­க­ளாக ரக­வுலி சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

சிறைக் கண்­கா­ணிப்­பா­ளர் அசோக் சாகர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களுக்கு எம்எல்ஏ அப்­பாஸ் அன்சாரி பெரும்தொகையை லஞ்­ச­மா­கக் கொடுத்ததாகவும் அதைப் பெற்­றுக்­கொண்டு கண­வ­ரு­டன் நிகத் பானு­வும் சிறை­யில் தங்கியிருப்­ப­தற்கு அவர்கள் அனு­ம­தி அளித்த தாகவும் கூறப்படுகிறது.

இதைத்­தொ­டர்ந்து, காவல் ஆய்­வா­ளர் பிருந்தா சுக்லா, மாவட்ட ஆட்­சி­யர் அபி­ஷேக் ஆனந்த் நடத்­திய திடீர் சோத­னை­யில், அசோக் சாக­ரின் அலு­வ­லக அறை உள்­பக்­க­மா­கப் பூட்­டப்­பட்­டி­ருந்­தது. கதவை உடைத்­துப் பார்த்­த­போது அப்பாஸ் அன்­சா­ரி­யும் நிகத் பானு­வும் அங்கு இருந்­த­னர்.

அத்துடன், அப்­பாஸ் அன்­சாரி தன் கைப்­பேசி மூலம் சாட்­சி­களை மிரட்­டு­வது, பணம் பறிப்பு உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு வந்­ததும் தெரியவந்தது.

அவ­ரி­டம் இருந்து இரு கைப்­பே­சி­கள், லட்­சக்­க­ணக்­கில் ரொக்­கப் பணம், தங்க நகை­கள் உள்­ளிட்­ட­வை­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இவ்­வ­ழக்­குத் தொடர்­பாக சிறைக் கண்­கா­ணிப்­பா­ளர் அசோக் சாகர் உள்­ளிட்ட எட்­டுப் பேர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் விசா­ர­ணைக் குப் பின்னர் அவர்­களும் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் சித்ர­குட் காவல் கண்­கா­ணிப்­பா­ளர் விருத்த சுக்லா தெரி­வித்­தார்.