ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

1 mins read
1b29866c-f4e3-4e7a-bfef-c34c8ddd0052
-

புது­டெல்லி: ராமர் பாலம் தொடர்­பான வழக்கை விரை­வில் விசா­ரிப்­ப­தற்கு உச்­ச­நீ­தி­மன்­றம் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா-இலங்கை இடை­யி­லான கடல் பகு­தி­யில் இருக்­கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என நம்­பப்­ப­டு கிறது.

அத­னால், சேது சமுத்­தி­ரத் திட்­டத்­தின்­போது ராமர் பாலத்தை சேதப்­ப­டுத்­தா­ம­லும் அதனை தேசி­யப் பாரம்­ப­ரிய நினை­வுச்­சின்­ன­மாக அறி­விக்­கக் கோரி­யும் கடந்த 2015ல் பாஜக மூத்த தலை­வர் சுப்­பி­ர­மணிய சுவாமி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் பொது நல மனுத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

இது­கு­றித்து மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­வ­தாக உச்­ச­நீதி­மன்­றத்­தில் சொலி­சிட்­டர் ஜென­ரல் துஷர் மேத்­தார் கடந்த ஜன­வரி 19ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தார்.

மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­யில் அதி­ருப்தி ஏற்­பட்­டால், உச்ச நீதி­மன்­றத்தை மீண்­டும் அணு­க­லாம் என­வும் சுப்­பி­ர­மணிய சுவா­மி­யி­டம் உச்ச நீதி­மன்­றம் கூறி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ராமர் பாலம் விஷ­யத்­தில் எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டா­த­தால், எனது மனுவை அவ­சர வழக்­கா­கக் கருதி விசா­ரிக்க வேண்­டும் என்று தலைமை நீதி­பதி டி.ஓய்.சந்­தி­ர­சூட் அமர்வு முன்பு சுப்­பி­ர­ம­ணி­ய­ சுவாமி தரப்­பில் முறை­யி­டப்­பட்­டது.

அர­சி­யல் சாசன அமர்வு விசா­ர­ணைக்­குப் பின்­னர் சுப்­பி­ர­ம­ணி­ய­ சுவாமி தாக்­கல் செய்த மனு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் உத்­த­ர­விட்­டார்.