இறந்த குழந்தையை 120 கி.மீ. ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற தம்பதி

2 mins read
53826c0f-b235-414d-af0f-30304032617b
-

விசா­கப்­பட்­டி­னம்: ஆந்­தி­ரா­வின் விசா­கப்­பட்­டி­னத்­தில் வசிக்­கும் ஒரு தம்­பதி, இறந்­து­போன தங்­க­ளு­டைய குழந்­தையை 120 கி.மீட்­டர் தூரம் ஸ்கூட்­ட­ரில் எடுத்­துச் சென்­றுள்­ள­னர்

அவ­சர வாக­னம் வரா­த­தால் இந்த அவல நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் பிர­ச­வத்­திற்­காக அனு­ம­திக்­கப்­பட்ட மகேஸ்­வரி என்ற பெண்­ணுக்கு இம்­மா­தம் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்­தது.

பிறந்­தது முதல் சுவா­சக் கோளாறு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளால் குழந்தை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் அவ­சர சிகிச்சைப் பிரி­வில் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை காலை 7.50 மணிக்கு அந்­தக் குழந்தை சிகிச்சை பல­னின்றி இறந்­து­விட்­டது.

இதனால் விசா­கப்­பட்­டி­னத்­தில் இருந்து 120 கிலோ மீட்­டர் தொலை­வில் இருக்­கும் தங்­க­ளு­டைய சொந்த ஊரான பாடேரு அரு­கில் இருக்­கும் குமுடு என்ற கிரா­மத்­திற்கு குழந்­தை­யின் உடலை அவர்கள் ஸ்கூட்­ட­ரில் எடுத்துச் சென்­ற­னர்.

உட­ன­டி­ன­யாக அவ­சர வாக­னம் கிடைக்­க­வில்லை. ஆனால் பாடேரு அரு­கில் சென்­ற­போது அங்கு வந்த அவ­சர வாக­னம் குழந்­தை­யின் உடலை ஏற்றிக் கொண்டு குமுடு கிரா­மம் சென்று சேர்ந்­தது.

இது குறித்து தக­வல் வெளி­யா­ன­தும் பெற்­றோ­ரி­டம் விசா­ரணை நடை­பெற்­றது.

அப்­போது, "குழந்­தை­யின் உடலை எடுத்­துச் செல்ல அவ­சர வாக­னத்­துக்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்று கேட்­டோம். ஆனால் அவர்­கள் ஏற்­பாடு செய்ய­வில்லை," என்று குழந்­தை­யின் பெற்­றோர் கூறி­னர்.

பிறந்து 14 நாட்­களே ஆன குழந்­தை­யின் உட­லு­டன் பெற்­றோர் 120 கிலோ­மீட்­டர் ஸ்கூட்­ட­ரில் பய­ணம் செய்த சம்­ப­வம் மாநில அள­வில் அதிர்ச்­சி­யை­யும் பர­ப­ரப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே ஆந்­திர முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவ­கா­ரத்தை விசா­ரிக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.