புதுடெல்லி: இந்தியாவில் சிறுத்தை இனம் ஏறக்குறைய அழிந்துவிட்டதால் ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்நாட்டில் இருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டன. இந்தச் சிறுத்தைகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் சிறுத்தை களுடன் நேற்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.
இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்
1 mins read
-

