'வில் அம்பு சின்னம் பெற கைமாறிய ரூ.2,000 கோடி'

'வில் அம்பு சின்னம் பெற கைமாறிய ரூ.2,000 கோடி'

1 mins read
3a6497ea-761b-4fca-a3bc-0a3a4fcdd131
-

மும்பை: சிவ­சேனா கட்­சி­யின் பெய­ரை­யும் வில் அம்பு சின்­னத்­தை­யும் பெற ஏறக்­கு­றைய ரூ.2,000 கோடி ரூபாய் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் சஞ்­சய் ராவத் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

அத்­து­டன், ஒரு எம்­எல்­ஏ­வுக்கு ரூ.40 கோடி வீதம் கொடுக்­கப் பட்­டுள்­ளது என­வும் உத்­தவ் தாக்­கரே அணி­யி­னர் விமர்­சித்­துள்­ள­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை மகா­ராஷ்­டிரா முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே தரப்பு மறுத்­துள்­ளது.

சிவ­சேனா கட்சி இரண்­டாக உடைந்த நிலை­யில், கட்­சி­யின் பெய­ர், வில் அம்பு சின்­னத்­தை­ ஏக்­நாத் ஷிண்டே தரப்­பி­னர் பயன்படுத்­திக்கொள்ள தேர்­தல் ஆணை­யம் நான்கு நாள்களுக்கு முன்பு அங்­கீ­கா­ரம் வழங்கியது.

இந்­நி­லை­யில், உத்­தவ் தாக்­கரே ஆத­ர­வா­ள­ரும் எம்பியு மான சஞ்­சய் ராவத், "கட்­சி­யின் பெயரும் சின்­னமும் ரூ.2,000 கோடிக்கு ஏக்­நாத் ஷிண்­டே­வால் வாங்­கப்­பட்­டுள்­ளது. இது 100 விழுக்காடு உண்மை. இது குறித்து விரை­வில் ஆதா­ரத்தை வெளி­யிட உள்ளேன்," எனத் தெரி­வித்­துள்­ளார்.