பதினொரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க மேல்முறையீடு

பதினொரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க மேல்முறையீடு

2 mins read
f9aababc-7b0c-4dff-983b-5cfb38546f89
-

புதுடெல்லி: குஜ­ராத்­தில் கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற ரயில் எரிப்­புச் சம்­ப­வம் தொடர்­பில், ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட 11 குற்­ற­வா­ளி­களுக்கு மரண தண்­டனை விதிக்­க­வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றத்­தில் குஜ­ராத் அரசு மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது.

கடந்த 2002ல் ராம­பக்­தர்­க­ளு­டன் சென்­று­கொண்­டி­ருந்த சபர்­மதி விரைவு ரயி­லுக்கு கும்­பல் ஒன்று தீவைத்­தது. குஜ­ராத்­தின் கோத்ரா ரயில் நிலை­யத்­தில் நடந்த இந்­தச் சம்­ப­வத்­தில் 59 பேர் கருகி உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, 11 பேருக்­குத் தூக்­குத் தண்­ட­னை, 20 பேருக்கு ஆயுள் தண்­ட­னை­ விதித்து விசா­ரணை நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

இத்தூக்குத் தண்­ட­னையை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த குஜ­ராத் உயர் நீதிமன்­றம், அதனை ஆயுள் தண்­ட­னை­யா­கக் குறைத்து உத்­த­ர­விட்­டது.

இத­னி­டையே, பிணை கேட்டு உச்ச நீதி­மன்­றத்­தில் பலர் தாக்­கல் செய்­துள்ள மனுக்­கள், தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு முன் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது குஜ­ராத் அரசு சார்­பில் சொலி­சிட்­டர் ஜென­ரல் துஷார் மேத்தா முன்­னி­லை­யாகி வாதிட்­ட­போது, "பெண்­கள், குழந்­தை­கள் உட்­பட 59 பேர் உயி­ரு­டன் எரித்­துக் கொல்­லப்­பட்ட கொடூ­ர­மான வழக்கு இது. ரயில் வெளி­யில் இருந்து பூட்­டப்­பட்டு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது.

"11 குற்­ற­வா­ளி­க­ளின் மரண தண்­ட­னையை ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றி­யதை எதிர்த்து குஜ­ராத் அரசு மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது. ரயில் பெட்­டியை வெளி­யில் இருந்து பூட்டி, தீவைத்து அதன் மீது கற்­களை வீசி­னால் அது கல்­லெ­றி­தல் சம்­ப­வம் ஆகி விடாது," என்­றார்.

இவ்வழக்கை மூன்று வாரங்­களுக்கு நீதிபதிகள் ஒத்­தி­வைத்து உத்தரவிட்டனர்.