100 கிலோ தங்கம் பறிமுதல்; ஏழு சூடான் நாட்டவர்கள் கைது

100 கிலோ தங்கம் பறிமுதல்; ஏழு சூடான் நாட்டவர்கள் கைது

2 mins read
626b93a3-c55a-413e-8b6f-cc379cacf788
-

புதுடெல்லி: இந்­தி­யா­வில் கடந்த இரண்டு நாள்­களில் மட்­டும் நூறு கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லா­மல் ரூ. 74 லட்­சம் மதிப்­புள்ள வெளி­நாட்­டுப் பண­மும் சிக்­கி­யுள்­ளது.

பாட்னா, புனே மற்­றும் மும்பை ஆகிய இடங்­களில் வெவ்­வேறு இடங்­களில் சோத­னை­கள் நடத்தி கடத்­தல் தங்­கத்தை அதி­கா­ரி­கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்­திய வரு­வாய் புல­னாய்வு இயக்­கு­ன­ர­கத்­தின் அதி­கா­ரி­கள், கடந்த 19ஆம் தேதி இரவு மும்­பைக்கு வர­வி­ருந்த சூடான் நாட்­ட­வர்­களை பாட்னா ரயில் நிலை­யத்­தில் மடக்­கிப் பிடித்­த­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து 40 பொட்­ட­லங்­களில் இருந்த 37.126 கிலோ எடை­யுள்ள தங்­கம் மீட்­கப்­பட்­டது.

சென்ற திங்­கட்­கி­ழமை ஐத­ரா­பாத்­தில் இருந்து மும்­பைக்கு பேருந்­தில் சென்ற இரண்டு சூடான் நாட்டு பெண்­களை புனே­யில் தடுத்து நிறுத்தி அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது, 5.615 கிலோ கடத்­தல் தங்­கம் சிக்­கி­யது. அதே நாள் பாட்­னா­வி­லி­ருந்து மும்­பைக்­குப் பய­ணம் செய்த இரண்டு சூடான் நபர்­கள் மும்பை ரயில் நிலை­யத்­தில் பிடி­பட்­ட­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து 40 பாக்­கெட்­டு­களில் 38.76 கிலோ தங்­கம் மீட்­கப்­பட்­டது. மேலும் 20.2 கிலோ கடத்­தல் தங்­கம் மற்­றும் ரூ.74 லட்­சம் மதிப்­புள்ள வெளி­நாட்டுப் பணம், ரூ.63 லட்­சம் இந்­திய பணம் மும்­பை­யில் பிடி­பட்­டது. இதில் மூன்று பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். மொத்­தம் ரூ.51 கோடி மதிப்­புள்ள சுமார் 101.7 கிலோ தங்­க­மும் ரூ.74 லட்­சம் மதிப்­புள்ள வெளி­நாட்டுப் பண­மும் ரூ.63 லட்­சம் இந்­திய பண­மும் கைப்­பற்­றப்­பட்­டன. இது­வரை ஏழு சூடான் நாட்டவர், மூன்று இந்­தி­யர்­கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.