புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி ஆறு வயது முடிந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று ஆண்டுகள் தரமான மழலையர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சு அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் அமைச்சின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் 1ஆம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

