குருகிராம்: ஹரியாணா மாநிலம், குருகிராமில் கொவிட்-19 தொற்றால் எங்கே உயிரை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஒரு தாயும் மகனும் முடங்கிக் கிடந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனியாக வாழ்ந்து வந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து, காவலர்கள் தாய்-மகனை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் உஷா சோலங்கி கூறுகையில், "சுஜன் மாஜி என்பவர் குருகிராம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தன் மனைவியும் மகனும் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு உள்ளனர் என்றும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
"இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்புக்குச் சென்று, பெண்ணையும் 11 வயது மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெளியே வந்தால் ெகாரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருவரும் தங்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது. பெண்ணின் மனநிலையை ஆராயவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்," என்றார்.
காவல்துறை யினர் 11 வயது மகனையும் (இடப்படம்) தாயையும் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
படம்: ஊடகம்

