மாமல்லபுரம்: பேருந்தை சொகுசு வீடாக்கி உலகம் முழுவதும் குடும்பத்துடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதியர், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
பெர்லின் நகரைச் சேர்ந்த காய், 45, இவருடைய மனைவி நீனா, 44, தம்பதியர், தகவல் தொழில்நுட்பத் துறை வேலை அலுப்புத் தட்டியதால் 12 வயது மகன் பென், 10 வயது மகள் லெனி ஆகியோருடன் பேருந்தில் உலகைச் சுற்றி வருகின்றனர்.
துபாயில் இந்த உல்லாசப் பயணத்தைத் தொடங்கிய குடும் பத்தினர் ஈரான், பாகிஸ்தானை சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவில் வட மாநிலங்களைக் கடந்து தற்போது மாமல்லபுரத்துக்கு வந்துள்ளனர்.
சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, குளிர் சாதன வசதி, துணி துவைக்கும் சாதனம், குளிர்சாதனப் பெட்டி, தெலைக்காட்சி என ஒரு சொகுசு வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்தப் பேருந்துக் குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்சாரத்துக்காகப் பேருந்தின் மேற்கூரையில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மடிக்கணினி மூலம் பிள்ளை கள் தினமும் இணைய வகுப்பு களைப் பயின்று வர, எதையும் இழந்து விடாமல் தங்களது கனவுகளை நிறைவேற்றி வருவதாக நீனா தெரிவித்தார்.
200 நாள்களில் 22,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ள இக்குடும்பத்தினர், இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேப்பாளம், மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வழியாக அமெரிக்காவில் தங்களது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகக் கூறினார்.
வாழ்க்கையை அனுபவிக்கவே இப்பயணத்தை தொடங்கி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

